கரோனா, நான்தான் பேசுகின்றேன். என்னால் உங்களுக்கு தொந்தரவா? கண்ணுக்குத்தெரியாமல் காற்றில் கலக்ந்து சுவாசத்தில் நுளைந்துவிடுகின்றேன் என்று பேசிக்கொள்கிறார்கள். முற்றிலும் பொய் நம்பாதீர்கள். நான் ஓர் தொற்றுக்கிருமி. என்னைத்தொட்டால் பற்றிக்கொள்கிறேன். தும்மலுடன் வந்து ஒட்டிக் கொள்கிறேன். இருமலுடன் செருமப்பட்டு வெளி வருகின்றேன். சுத்தமாக இருந்தால் சத்தமில்லாமல் போய்விடுகின்றேன். என்னை அழிக்க நீங்கள் வேறெதுவும் செய்ய வேண்டாம்.
உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருங்கள்.
எங்கிருந்து வந்து உங்கள் உடலில் புகுந்து கொண்டேன்? வவ்வால்களை உண்ட பாம்பிலிருந்து வந்ததாக கூறுகின்றார்கள். வவ்வால்களுக்கு எந்த நுண்ணுயிர் கிருமிகளின் தாக்கமும் விரைவில் நெருங்கிவிடுவதில்லையாம். அதிக எதிர்ப்பு சக்தியும், எந்த நுண்ணுயிரிகளின் தாக்கத்தையும் தாங்கும் வல்லமை படைத்தவைகள்தான் வவ்வால்கள் என்பது ஆராட்சியாளர்கள் முடிவு. வவ்வால்களின் உடலில் பதிங்கியிருந்த நான், வவ்வால்களை உண்ட பாம்பின் உடலின் வெப்ப தட்பத்திற்கு ஏற்ப எனக்கு சிறிது உருவங் கொடுக்கத்தொடங்கினேன். ஆனாலும் பாம்பிடம் என்னால் உயிர்வாழ முடியவில்லை. பாம்பை உண்ட மனிதன் சற்று தளர்ந்திருந்தான். நோய்வாய்ப்பட்ட மனிதனின் உடல் என்னை அழிக்கும் சக்தியைப் பெற்றிருக்கவில்லை. அவனிடம் ஒட்டிக்கொண்டேன்.
இல்லை. இவ்வாறு நான் உருவாகவில்லை. மனிதன்தான் என்னைப் பரிசோதனைக் கூடத்தில் உருவாக்கினான். பெருகிவரும் சனத்தொகையை கட்டுப்படுத்த இயற்கை ஆயுதமாக என்னை உருவாக்கினார்கள். பாலியல் தொற்று நோய் என்ற கிருமியின் மூலக்கூறுகளை ஆராய்ந்து அதிலிருந்து சற்று வேறுபட்ட இந்த வைரசை உற்பத்தி செய்தார்கள். இது இந்திய ஆராச்சியாளர்களின் எடுகோள். இதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. முன்னுக்குப்பின் முரண்பாடான முடிவுகளைத்தந்திருக்கிறார்கள்.
2011 ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து Contagion என்று ஒரு படம் வெளியாகியிருந்தது. இந்தப் படத்தில் புகழ்பெற்ற பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்தப்படத்தின் கரு ஒரு தொற்று வைரஷ். ஒரு நாட்டின் வரையறைக்குட்பட்டிருந்த இந்த தொற்றுக்கிருமி எவ்வாறு பல நாடுகளுக்கும் பரவத் தொடங்குகின்றது என்றும், அதனால் அன்றாட வாழ்வில் அவை எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்பதும், மக்களிடையே ஏற்படும் தொற்றுப்பீதியையும் வெளிக்காட்டுகிறது இந்தப் படம். இன்றைய கரோனா நிலைமைக்கும் இற்றைக்கு ஒரு தசாப்தங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட இந்தப் படத்திற்கும் என்ன தொடர்பு?
ஒருவேளை இந்தப் படத்தை பார்த்தவர்கள் அவ்வாறான ஒரு முயற்சியில் ஈடுபட்டார்களா? இல்லை; இந்தப் படத்தை உருவாக்கியவருக்கு ஞான உதயம் கிடைத்ததா? இவ்வாறான ஒரு சம்பவம் வருங்காலத்தில் உருவாகப்போகின்றது என்று?
என்னை அழிக்கும் மருந்தை கண்டுபிடிக்கும் ஆராச்சியில் ஒரு குழு முன்னேறிக்கொண்டிருக்க, நான் தொற்றிவிடாதிருக்க தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் இன்னொரு குழு ஆரவாரம்…..!
எது எப்படியிருப்பினும் “சுத்தம் சுகம் தரும்” என்ற வாசகத்திற்கு இணங்க ஆரோக்கியமாகவும், சுகாதாரமாகவும் இருப்பதுடன். உலக சுகாதார அமைப்புகள் விடுக்கும் சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றினால் என்னால் உங்களிடம் ஒட்டிக் கொள்ளவோ உயிர்வாழவோ முடியாது.
தொடர்புடைய சிறுகதைகள்
அது ஒரு மாலை வேளை, அவசர அவசரமாக பணியிலிருந்து வந்த வசுந்தரா விறு விறுவென்று சமைக்கத் தொடங்கினாள். இரவு உணவைப் பிள்ளைகளுக்கு ஊட்டிவிட்டு அவர்களை நேரத்தோடு படுக்க வைத்தாள். தானும் கணவரோடமர்ந்து உரையாடிக்கொண்டே உணவை மென்று சுவைத்தாள். ஆனாலும் உணவு தொண்டைக்குள் ...
மேலும் கதையை படிக்க...
அது ஒரு அதிகாலை வேளை, எப்பவும்போலவே ஒலிக்கும் வில்வையடிப்பிள்ளையார் கோயில் மணியோசை அன்று ஒலிக்கவில்லை. இலைகளின் சலசலப்பு கேட்டால் கூட திடுக்கிடும் பயம் உடனே தொற்றிக்கொள்ளும். அந்த அளவுக்கு ஊரே பேரமைதியாய் இருந்தது. அது ஒரு சிறிய நகரம் என்றே சொல்லலாம். ...
மேலும் கதையை படிக்க...
ஒரு அழகான குடும்பத்தில் கணவன், மனைவி, இரண்டு பெண் பிள்ளைகள் மற்றும் ஓர் ஆண் பிள்ளை என வீடே குதூகலம்தான். குட்டி கண்ணனுக்கு வயது ஒன்பதுதான் அவன்தான் வீட்டில் கடைக்குட்டிப்பிள்ளை. அவன் அக்காமார் அவனைவிட இரண்டும் மூன்றும் வயதே மூத்தவர்கள்.
கண்ணனுக்கு ஆருயிராய் ...
மேலும் கதையை படிக்க...
அவனுக்கு இப்போது வயது முப்பது. நல்ல குண்டுத்தோற்றம். சுமாரான உயரம். என்றும் புன்னகை பூத்த முகம். தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருக்கும் அவனைத் தேடி அவன் அலுவலக அறைக்கு அடிக்கடி சக பணியாளர் கூட்டம் அலை மோதும்.
காலையில் கண்டவுடன் ...
மேலும் கதையை படிக்க...
அது ஒரு மாலை நேரம், மூன்று நான்கு மணியிருக்கும் 1996 ஆம் ஆண்டு என நினைவிருக்கிறது.இன்று போலவே பெருத்த மழை சோ என்று பெய்துகொண்டிருந்தது. இடையிடையே இடி மின்னல் முழக்கம் காதை பிளந்து கொண்டிருந்தது. எப்பவும் போல இடிமின்னல் வந்தால் “ ...
மேலும் கதையை படிக்க...
அன்று ஒரு நாள், வைகாசி மாதத்து வெள்ளிக்கிழமை.வெளியில் காற்று பலமாக வீசிக்கொண்டிருந்தது. பனித்தூறல் சாளரத்தில் பட்டுப் பட பட வென்று தட்டி எழுப்புவதுபோல் ஓசையெழுப்பியது. இன்னுமா தூங்கிக் கொண்டிருக்கிறாய் என்று தன்னைத்தானே கேள்வி கேட்டபடி மெல்லக் கண்விளித்தான் ரிசி.
இரண்டு பெரிய படுக்கை ...
மேலும் கதையை படிக்க...
1974 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் 21 ஆம் திகதியன்று ஓர் அழகான ஜோடி தமது பதிவுத்திருமணத்தை பெற்றோரும் உற்றாரும் சூழ்ந்து நிற்க இனிதே நிறைவேற்றினர். அதனைத்தொடர்ந்து மஞ்சள் பட்டுச்சேலையில் மணமகள் மணமேடையேற, பட்டு வேட்டி சால்வையோடு அரும்பு மீசை தளிர்க்க ...
மேலும் கதையை படிக்க...
அன்றைய நாள் அவளுக்கொரு புதிய அனுபவத்தைக் கொடுக்கப்போகின்றதென்பதை அறியாதவளாய் சுறு சுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தாள் தேன்நிலா.வரிசையில் காத்திருப்பவர்களை ஓரக்கண்ணால் பார்த்தபடி, இலக்கம் 120 என்ற நம்பரை அழுத்தியபோது; அவளிடம் வந்த நபருக்குரிய மருந்துப்பெட்டிகளின் லேபிளை கணனியில் எழுதிக்கொண்டிருந்தாள் அவள். நன்கு உயர்ந்த வாட்டசாட்டமான ...
மேலும் கதையை படிக்க...
அது ஒரு ஆவணி மாதத்து வெள்ளிக்கிழமை. வேலையில் இருந்து வீட்டிற்கு வந்த ப்ரியா, அவசர அவசரமாக சமையல் வேலைகளை முடித்துவிட்டு, வெளியில் புறப்படத் தயாரானாள். நானும் வருகின்றேன் என்று அடம்பிடித்தான் ஏழு வயதான மகன். இதோ அரை மணித்த்கியாலத்தில் வந்து விடுகின்றேன் ...
மேலும் கதையை படிக்க...
அது ஒரு இலையுதிகாலத்தின் இதம் கலந்த மாலை வேளை. மிகப் பிரமாண்டமான உல்லாச விடுதியில் ( கோட்டல்) வரவேற்பு மண்டபத்தில் இரவு நேர விருந்துபசாரத்திற்காக காத்திருக்கின்றார்கள். வண்டுகள் ரீங்காரம் செய்யும் ஓசைபோல் கேட்கிறது ஆங்காங்கே குழுமி நின்று பேசிக்கொண்டிருப்பவர்களின் இரைச்சலான பேச்சு. ...
மேலும் கதையை படிக்க...