“எனக்கு பேஸ்புக்குல அறுநூற்று சொச்சம் பிரன்ட்ஸ் இருக்காங்க, அவங்க கூட நான் பேசி பழகி என்னோட கருத்த அவங்களுக்கு சொல்றேன், அவங்களும் என்னோட கருத்துக்கு லைக்ஸ் தாராங்க” என பெருமிதப்பட்டுக் கொள்வாள் பொன்னி.
காலை எழுந்தவுடன் ஒரு காப்பி சாப்பிட்டு விட்டு, வீட்டுக்காரரை வேலைக்கு அனுப்பிட்டா அப்புறம் லேப்டாப்பும் கையுமாய். இருக்கிறாள். குழந்தைகள் நன்றாய் தூங்கும். எழுப்பினால் இடைஞ்சல்தானே. பெரியவன் ஸ்கூல் போவதற்கு கால்மணி நேரம் முன்னால் எழுந்திருச்சு பல்துலக்கி குளிச்சு அதற்குள் ஸ்கூல் வேன் போயிடும். அவனை ஸ்கூல்ல விட்டுட்டு வந்தப்புறம் மறுபடியும் லேப்டாப்
சிறியவனை கொஞ்சறதில்ல, குழந்தைகளுக்கு இப்பொழுது பொம்மைகள் எல்லாம் வாங்கிதர வேண்டியதில்லை. இந்தா மொபைல்” என கொடுத்தால் அதை வாங்கிக்கொண்டு ஒடீவிடும். மொபைல், லேப்டாப்பிடும் காட்டும் ஐக்கியம் குழந்தைகளிடம் காட்டுவதில்லை.
பேச்சு குறைந்து, வீட்டுக்காரர்கிட்ட ஏதாவது பேசணும்ன்னாகூட மொபைலில் ஒரு எஸ்.எம்.எஸ் அவ்வளவுதான். சாயங்காலம் வீட்டுக்காரர் வந்தா அவரும் ஒரு லேப்டாப்பும் கையுமாய் மூழ்கி விடுவார் ஏப்பத்தான் பேசுவாங்களோ யாருக்கும் தெரியாது.
உலக அதிசயம் போல் ஒருநாள் பேச்சு ஆரம்பித்தது “என் தங்கச்சி ஊர்ல இருந்து பேசுனா, அவளுக்கு கல்யாண ஏற்பாடு செய்ய அப்பா முயற்சி எடுக்கிறார் . பணத்துக்கு திண்டாடுறாராம் அதனால ஒரு ஐந்து இலட்சம் என்கிட்ட இருந்து எதிர்பார்க்கிறாங்க போல இருக்கு..என முடிப்பதற்குள்.
இங்க என்ன கொட்டியா கிடக்கு…. நமக்கு ரெண்டு குழந்தைகள் இருக்காங்க அவ்வளவு பணம்லாம் முடியாதுன்னு சொல்லிடுங்க என்று பொன்னி சொல்ல
“கூடப்பிறந்தவளாச்சே நான்தானே செய்யணும்” என்ற கணவனின் பதில் கேட்டு
“இங்கே நான் கஷ்டபடுறது தெரியலியா? பேச்சு முற்றி ஒருவருக்கொருவா; முகத்தை திருப்பிக் கொண்டனர்
மூன்று நாள் போனபின்னால் தன் மொபைலிpலிருந்து “ஸாரி என்று கணவனுக்கு எஸ்;.எம்.எஸ் அனுப்ப….”இட்ஸ் ஓ.கே” என எஸ்.எம்.எஸ்ஸாகவே பதில் வந்தது
வழக்கம்போல லேப்டாப்பில் தன் குடும்ப உறவுகளை மறந்து விட்டு கரங்களில் முகநூல் என்ற சங்கிலியை மாட்டிக்கொண்டு ஊரில் முகமறியாதவர்களிடம் எல்லாம் பேசி அவர்களின் கருத்துகளுக்கு, ஜோக்குகளுக்கு, கவிதைகளுக்கு “லைக்ஸ்” தட்டிக்கொண்டிருக்கிறாள் பொன்னி
தொடர்புடைய சிறுகதைகள்
திரிலோக சஞ்சாரியான நாரதர் ஆப்பிள் போனை கையில் வைத்து பார்த்து கொண்டே…. தம்பூராவை மீட்டாமலும், நாராயணா பெயரை மறந்தும்… சிவலோகத்தில் நுழைகிறார்.
பூதகணங்கள் உடனே ஓடிப்போய் சிவனிடம்..வத்தி வைத்து விடுகிறார்கள்.
சிவனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வருகிறது.. வரட்டும்..வரட்டும் பார்த்து கொள்ளலாம் என்று உர்ரென்று ...
மேலும் கதையை படிக்க...
”என்ன மீனு சந்தோஷமா இருக்கே, ஏதாவது விசேஷமா ?- கணவன் ராஜேந்திரன் கேட்டான்.
”எங்க அப்பா கேரம் டோர்னமென்ட் விளையாட திருச்சி வந்திருக்காராம், முடிச்சுட்டு நம்ம வீட்டுக்குத்தான் வர்றாராம்”!
”வரட்டும்…வரட்டும்…உன் அப்பா டிஸ்டிரிக்ட் லெவல்ல பெரிய சாம்பினயன்தானே? என்கிட்ட மோதி ஜெயிக்கட்டும், நான் ஜெயிச்சா ...
மேலும் கதையை படிக்க...
கண்ணயர்ந்திருந்த ராமகோபாலன், வீட்டின் காலிங் பெல் சத்தம் தொடர்ந்து அடித்ததால் வெளியே போய் எட்டிப் பார்த்தார்.
”அடே, அடே, வாப்பா இராஜேஷ்” என உள்ளே கூப்பிட்டு போனார்.
என்ன அங்கிள் வெளியே போகலையா? என்று கேட்டான் இராஜேஷ். அதற்கு ” வெயில் கொளுத்தறதால வீட்டை ...
மேலும் கதையை படிக்க...
கதை கேளுங்கள்: https://youtu.be/YfBTUAOdslM
பசுமை நிறைந்த அழகிய கிராமம். புழுதி பறக்கும் மண்சாலை வசதி இருந்தது.
புழுதி பறக்கும் மண்சாலையைத் தாண்டினால் சிறிய மலைக்குன்று ஒன்று இருந்தது. அந்தக் குன்றின் மேலே ஏறுவதற்கு சரியான பாதை இல்லை!
பாதையில்லாததால். மலைக்குன்றில் மனித நடமாட்டம் இல்லாமல் அமைதியாய் ...
மேலும் கதையை படிக்க...
டாக்டர், என் ஒடம்பை செக் பண்ணுங்கோ”
என்னப்பா ஆச்சு?
நடந்தா கூடவே வருது டாக்டர்!
எதுப்பா?
ஒடம்புதான் டாக்டர்
அப்படியா?
அப்புறம்
கண்ணு மூடுனா தூக்கமா வருது டாக்டர்
கண்ணு துறந்தா
பார்க்கறதெல்லாம் பளிச்சுன்னு தெரியுது டாக்டர்
அப்படியா? என்னை தெரியுதா?
நல்லாவே தெரியுது டாக்டர்
சரி, யோசிக்க வேண்டிய விஷயம்தான்
காலைல பத்து இட்லி சாப்பிட்டா கூட மத்தியானம் ...
மேலும் கதையை படிக்க...
“மிஸ்டர் ஷியாம், புதுசா நம்ம விளம்பர கம்பெனிக்கு சேர்ந்திருக்கீங்க, அதனால, நாம எடுக்கப் போற விளம்பரப் படத்துக்கான மாடலைப் போட்டோ எடுக்கணும். அதுக்கு ஐடியா வேணுமின்னா நம்ம சீனிவாசனைக் கேட்டுக்கோங்க” என்றார் நிறுவனத்தின் எம்.டி.
”ஐடியாவா? அவரிடமா? பத்தாவது படிச்சிட்டு காமிரா புடிச்சிட்டா, ...
மேலும் கதையை படிக்க...
“கொஞ்சம் தடுமாறித்தான் போனான் கனேஷ்.. அவனுடைய சர்வீஸில் இதுவரை திக்குமுக்காடியதில்லை. ஆனால் இன்றோ…” தலையைப் பிய்த்துக் கொள்வது போல இருந்தது அவனுக்கு.
பிரபல தொழிலதிபர் மரணம்தான் அவனை அலைக்கழித்தது. தொழிலதிபர் மரணத்துக்கும்…இவனுக்கும் என்ன தொடர்பு.. ”யாரோ கேட்பது புரிகிறது. கனேஷ் பிரபல துப்பறியும் ...
மேலும் கதையை படிக்க...
அழகியகாளை நல்லூர் என்ற கிராமத்தில் பசுபதி என்ற நடுத்தர வயதுடையவனும் வசித்து வந்தான். அவனிடம் ஏறக்குறைய பத்து மாடுகள் இருந்தன.
அந்த மாட்டிடம் இருந்து பால் கறந்து ஊருக்கெல்லாம் அளந்து கொடுத்து தேவையான பணத்தைப் பெற்றுக் கொள்வது அவனது வாடிக்கை.
அப்படி வியாபாரம் செய்து ...
மேலும் கதையை படிக்க...
பிரபல புடவைக் கடையின் மேனேஐர்தான் கேசவன். ஆனால் அவன் மனைவி சித்ராவே சேலைக் கட்டுவதில்லை. என்ன செய்வது? சித்ரா தொலைக்காட்சி சீரியல்களில் நடிக்கிறாள். பெரும்பாலும், அவள் நடிப்பது மாடர்ன் பெண் கதாபாத்திரங்களில்தான். அதற்காக மாடர்ன் டிரஸ் போட்டுப் போட்டு அப்படியே அதற்கு ...
மேலும் கதையை படிக்க...
“உள்ளே நுழையலாமா ? வேண்டாமா ? தயங்கி கொண்டிருந்த, சுஷ்மாவை ”என்னம்மா, தயங்கி தயங்கி வாரே ? ஏதாச்சிலும் கம்ப்ளையன்ட் கொடுக்கணும்ன்னா உள்ற போ! வழியில நிக்காதே, பெரிய அதிகாரிங்க வந்தா என்னை திட்டுவாங்க” என்றார் பாரா போலிஸ்காரர்.
உள்ளே போனவள், ஸ்டேஷன் ...
மேலும் கதையை படிக்க...
கார்பரேட் கம்பெனியில் பாட்டி வடை சுட்ட கதை
என்னுடைய முகநூல் சங்கிலி- என்ற கதையினை தங்கள் தளத்தில் பதிவிட்டமைக்கு மிக்க நன்றி. என்னுடைய வலைத்தளமான http://kavithaigal0510.blogspot.com -லிருந்தும் கதைகளை எடுத்து பதிவிட்டு கொள்ளலாம். மிக்க நன்றி