”என்ன மீனு சந்தோஷமா இருக்கே, ஏதாவது விசேஷமா ?- கணவன் ராஜேந்திரன் கேட்டான்.
”எங்க அப்பா கேரம் டோர்னமென்ட் விளையாட திருச்சி வந்திருக்காராம், முடிச்சுட்டு நம்ம வீட்டுக்குத்தான் வர்றாராம்”!
”வரட்டும்…வரட்டும்…உன் அப்பா டிஸ்டிரிக்ட் லெவல்ல பெரிய சாம்பினயன்தானே? என்கிட்ட மோதி ஜெயிக்கட்டும், நான் ஜெயிச்சா உனக்கு ஸ்பெஷல் பரிசு வாங்கித் தர்றேன்! என்றான்.
”நீங்களாச்சு…உங்க மாமனாராச்சு…”என சமையலறைக்குப் போனாள்.
மாமனாரும் வீடுவந்து சேர்ந்தார, உபசரித்து விருந்து முடிந்து சிறிது ஓய்வுக்குப்பின்….சவால் போட்டி ஆரம்பமானது, விளையாட்டு சூடுபிடித்தபோது சாம்பியன் மாமனார் கைவரிசையைக் காட்ட, ராஜேந்திரனும் சளைக்காமல் போட்டி போட்டான். கடைசியாய் சிவப்பு காயினை மாமானார் ஸ்ட்ரைக்கரால் தட்ட முயல, ஸ்ட்ரைக்கர் நேராக குழிக்குள் விழுந்து மைனஸ் ஆனது. ராஜேந்திரன் சுலபமாக ரெட்காயினைத் தட்டி, டசாம்பியனை தோற்கடித்தான். மறுநாள் ஊருக்குக் கிளம்பும் முன்பு…”எப்படிப்பா தோத்தீங்க?” என்று கேட்டாள் மீனு.”
”உனக்கு ஸ்பெஷல் பரிசும் வரணும், எனக்கு மாமனார் அந்தஸ்தும் குறையக்கூடாதும்மா, கண்டுக்காதே!” என்றார் அப்பா.
- 21-12-2015
தொடர்புடைய சிறுகதைகள்
“இராமாயி, கதவை நல்லா முடிக்கோ!, யாரு கதவைத் தட்டினாலும் திறக்காதே!” எச்சரித்து கதவைச் சாத்தினான் நல்லக்கண்ணு
”ஏனுங்கோ, அமாவாசை இருட்டுல எங்கே போறீங்க?”
”அமாவாசை இருட்டுதானே, நம்ம தொழிலுக்கு தோதா இருக்கும், அதான், சந்திரபுரிக்கு போறேன், அங்க போனா ஏதாச்சும் தேறும்” எனக் கிளம்பினான்.
”ஏன்தான் ...
மேலும் கதையை படிக்க...
தொழிலதிபர் சிவக்கொழுந்துவுக்கு போன் கால்கள் வந்தவண்ணம் இருந்தன. நாட்டின் சிறந்த தொழிலதிபர் விருது அவருக்கு அறிவிக்கப்பட்டிரந்த்து. நான்கு பேரோடு ஆரம்பித்த கம்பெனி….இன்று நாடெங்கும் ஏராளமான கிளைகள். பாக்கி இல்லாமல், ஏமாற்றாமல் வரி செலுத்துவதில் இவருடைய நிறுவனம் நம்பர் ஒன்னாக இருந்து வருகிறது.
பரிசு ...
மேலும் கதையை படிக்க...
முக்கியமான கூட்டத்தில் கலந்து கொள்ளவும்.
நம்மை அழிக்க திட்டம் போடுகிறார்கள். அதை கிள்ளியெறிய வேண்டும். ஆலோசனைகள் அள்ளி வழங்க தவறாமல் வரவும்.
பிட் நோட்டிஸ் விநியோகிக்கப்பட்டது.
கூட்டம் நடத்தும் அரங்கில் நாற்காலிகள் போடப்பட்டிருந்த து. தலைமை விருந்தினராக “டெங்கு மன்ன ன்64-ஆம் கொசு” கம்பீரமாக மூக்கை ...
மேலும் கதையை படிக்க...
“எங்க குடும்பம் ரொம்ப பெரிசுங்க நான் “அவளை” இருபத்து நாலுமணி நேரமும் தொட்டுக்கிட்டே இருக்கணும் நினைக்கிறேன், ஆனா அவ படுத்துற பாடு இருக்கே, ஆதாங்க என்னால தாங்க முடியல!
“நான் அவளைத் தொடும் அடுத்த நொடியில்… என்னிடமிருந்து விலகி ஓடிறாள்“
இருங்க அவள் பேரைச் ...
மேலும் கதையை படிக்க...
ரங்கனை ஒரு மாதிரியாக ஏறஇறங்க பார்த்தார் டிராப்ட்ஸ்மேன் வாசு.
”என்ன ஸார் ஒரு மாதிரி பாக்குறீங்க? கேள்வி கேட்டான் ரங்கன். ”என்னப்பா, இந்த காலத்துல, வீடு கட்டுறதுக்கு, இப்படி ஒரு வரைப்படம் வரைஞ்சு கொடுக்க சொல்றீயே, இதெல்லாம் பழைய காலத்து ஆட்கள் கட்டுறது. ...
மேலும் கதையை படிக்க...
”புளியமரத்துக்கிட்டா போனா, ஆவி புடிச்சிக்கும்-ன்னு” சின்ன வயசில அம்மா சொன்னது அப்படியே மனசுல ஆழமா பதிஞ்சதல, புளியமர பக்கமே போக்கூடாது-ன்னு வைராக்கியமாய் இருந்த புண்ணியகோட்டிக்கு வந்த து சோதனை!
”பேய் காற்றுடன், பேய் மழையும் சுழற்றியடிக்க அவனின் வைராக்கியம் மழையில் கரைந்து வேறுவழியில்லாமல் ...
மேலும் கதையை படிக்க...
“வாய்நிறைய பல்லாக வரவேற்பதில், வெங்கட்டுவை மிஞ்சி அந்த ஏரியாவில் யாருமே இல்லை.
போஸ்ட்மேன் முதற்கொண்டு, கேஸ் டெலிவரி பாய் வரை,தெரிந்தவர், தெரியாதவர்கள் என்ற பாகுபாடில்லாமல் “உள்ற வாங்கோ, காபி சாப்பிட்டுட்டு போங்கோ“ன்னு உபசரிப்பதில் அலாதி பிரியம் அவருக்கு. அந்த பிரியத்திலும் சுயநலமுண்டு. வருகிறவர் ...
மேலும் கதையை படிக்க...
”ஆ” அம்மாவென அலறினான்” எதிரே பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்தவள் காதில் …என்ன விழுந்த த்தோ… ஸ்மார்ட் போனில்… இலாகவமாய் விரல்களால் விளையாடினாள்.
அடுத்த ஐந்தாவது நிமிடம்….. சைரன் ஒலி கேட்டது. ஏதோ, ஆம்புலன்ஸ் என்று பார்த்தால் போலிஸ் ஜீப் … காலோரம் உரசியபடியே ...
மேலும் கதையை படிக்க...
கழுத்துல பெரிய டால் பதித்த தங்க செயின், நான்கு விரல்களிலும் மோதிரங்கள் மின்னிக் கொண்டிருக்க …”தட்டுல தட்சிணை போடுங்கோ” ”தட்டுல தட்சிணை போடுங்கோ” என்று கேட்டால் எப்படி இருக்கும்.
பலரும் முகம் சுளித்தனர். …. ”ஏன்டி பங்கஜம். குருக்கள் நல்ல வசதியாத்தானே இருக்கார். ...
மேலும் கதையை படிக்க...
“ஏனுங்கோ. கருவேப்பிலை வாங்கி வாங்களேன்” சமையலறையிலிருந்து குரல் கொடுத்தாள் சீதை.
“என்னது ? நான் இன்னா செய்துட்டிருக்கேன், எத்தனை தடவை சொல்றது, தியானம் பண்ணும்போது இடைஞ்சல் செய்யாதே-ன்னு கேட்கவே மாட்டியா ! நீயே போய் வாங்கிக்கோ” என்று சொல்லிவிட்டு கண்களை மூடி தனியறையில் ...
மேலும் கதையை படிக்க...
டெங்கு மன்னன் 64-ம் கொசு இராஜ்யம்
பதிவிற்கு நன்றி