வள்ளிக்குக் கணவன் முயற்சி பிடிக்கவில்லை. நகைகளை இழக்க மனமில்லை.
”என்னங்க ! கீழ் வீடே வெளிப் பூச்சுப் பூசாமல் அரையும் குறையுமாய் வாழ்ந்துக்கிட்டு இருக்கோம். இப்ப போய் இருக்கிற நகைகளை வித்து வங்கியில கடன் வாங்கி மாடி கட்றதுக்கு முயற்சி செய்யிறது நியாயமா ?” கேட்டாள்.
”பேசாம இரு தடுக்காதே !” குணா மறுத்தான்.
”தடுக்கலை. வீண் சிரமம். மேலும் மேலும் கடன். ஆறுமாசத்துக்குள்ளே மாடி கட்றாங்களேன்னு நம் சாதி சனத்துக்கெல்லாம் நம் மேல் பொறாமை, கண்ணு. எல்லாத்தையும் நான் யோசனை செய்துதான் சொல்றேன்.”
”நானும் எல்லாத்தையும் யோசிச்சுதான் செய்யிறேன்.”
”என்ன யோசனை ?. எதுவாய் இருந்தாலும் கட்டின பொண்டாட்டிக்கிட்ட ஒரு வார்த்தைக் கலந்து செய்யுங்க. பின்னால பிரச்சனை வராம இருக்க அது நல்லது.”
”சரி சொல்றேன். இன்னைய சூழ்நிலையில புறநகர்ல ஒத்தையாய் வீடிருந்து குடும்பம் தனிச்சிருக்கிறது கஷ்டம். நாம வேலைக்குப் போய் வீட்டுக்குக் காவலாய் என் அம்மா இருக்கிறதும் பாதுகாப்பில்லே. கொள்ளைக்காரன்கள் வயசானவங்களைத்தான் முதல்ல குறி வைச்சுத் தாக்குறான்கள். மேலும் ஒரு அவசர அவசியத்துக்கு எல்லாரும் கிளம்பி வீட்டைப் பூட்டிப் போட்டுப் போறது வீட்டைக் கொள்ளைக்காரன்கள் கையில குடுத்துட்டுப் போறதுக்குச் சமம். நாம மாடி கட்டி ஒரு குடும்பத்தைக் குடி வைத்தால் வீடு, நமக்கு மொத்தத்துக்கும் பாதுகாப்பு. ஒருத்தருக்கொருத்தர் துணை.” முடித்தான்.
கணவன் யோசனைப் பிடித்திருக்க, ”சரிங்க” முழுமனதாய்ச் சம்மதித்தாள் வள்ளி.
தொடர்புடைய சிறுகதைகள்
மலர்ந்தும் மலராத காலைப் பொழுது 5.15 மணி அளவில் தன்னந்தனியே ஒரு ஆள் ஆஆஆஆ......வென்று ஒரு நாள் இரண்டு நாளில்லை. ஒருவார காலமாய்....ஓலம் விட்டுக் கொண்டிருந்தால் உங்களுக்கு எப்படி இருக்கும். நீங்கள் என்ன நினைப்பீர்களோ.... அதேதான் எனக்கும்.
எனக்கு வயது 63. மூன்றாண்டுகளுக்கு ...
மேலும் கதையை படிக்க...
கை பேசியில் பேசி முடித்த கமலாம்மாள் முகத்தில் கலவரம்.
'' என்ன..? '' கேட்டேன்.
‘’ போலீஸ் ஸ்டேஷனிலிருந்து போன். ‘’
‘’ஏன்...? ‘’
‘’ ஜவுளி கடைக்குப் போன சின்னப்ப பொண்ணும் மாப்பிள்ளையும் அங்கே இருக்காங்களாம். வரச் சொல்லி அழைப்பு.’’
‘’ என்ன விஷயம்..? ‘’
‘’ தெரியல...’’
‘’ ...
மேலும் கதையை படிக்க...
சந்தியாவதனம் முடித்து சாமி கும்பிட்டு சாப்பாடெல்லாம் முடித்து சாவகாசமாக வந்து அமர்ந்த பரமசிவம் எதிரில் பவ்வியமாக வந்து அமர்ந்தாள் திவ்யா.
வயசு 27. பொறியியல் படிப்பு. அயல்நாட்டு இந்திய கம்பெனி ஒன்றில் அரை லட்சத்திற்கு மேல் சம்பளம்.
நடு நெற்றியில் வட்ட அகலப் பொட்டு. ...
மேலும் கதையை படிக்க...
'' நீங்களா கத்தியை எடுத்து ஒருத்தருக்கொருத்தர் குத்திகிட்டு சாகப் போறீங்களா.! ...இல்லே ... நானே இந்த துப்பாக்கியால உங்க ரெண்டு பேரையும் சுட்டு அந்த காரியத்தைச் செய்யவா. ..? '' - கேட்ட.....
வரதராசனுக்கு வயது 50 .சோபாவில் கால்மேல் கால் போட்டு ...
மேலும் கதையை படிக்க...
அந்தமான் எக்ஸ்பிரஸ் ஜம்மு காஷ்மீர் கட்ராவை நோக்கி சென்னையிலிருந்து மூன்று நாள் பயணத்தில் ஒரு நாள் பயண தூரமான மூன்றில் ஒரு பங்கைக் கடந்து கொண்டிருந்தது.
எஸ். 7 ல் பயணம் செய்யும் நான், பூவரசன், அழகேசன், குசேலனைத் தவிரஅமர்நாத்திற்குப் பயணம் செய்யும் ...
மேலும் கதையை படிக்க...