ராமு தன் மனைவி ரதியிடம் கோபித்துக் கொண்டதால் முதல் முறையாக அவள் அம்மா வீட்டுக்குச் சென்றுவிட, அவனுக்கு வீட்டில் உள்ள பொருட்கள் எது எங்கே இருக்குன்னு தெரியாமல்
படாத பாடு பட்டுவிட்டான்.
சட்டை எடுக்க பீரோவைத் திறக்க, முன்னாடி வந்து விழுந்தது ரதியின் டைரி. எடுத்துப் படிக்க ஆரம்பித்தான்.
“அலுவலகம் செல்ல அவசரக் குளியல் போட்டு கிளம்பும் உன்னை, தலை முதுகு தேய்த்து, குளிப்பாட்டி, உன் தலையை என் முந்தானையால் துவட்டும் என் கடமையைச் செய்ய நேரம் இல்லையே என்ற வருத்தமடா எனக்கு.’
“என்னடி…ன்னு நீ என்னை கூப்பிடும்போது என் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் புதிதாய்ப் பிறந்தது போன்ற உணர்வு எனக்குள்.’
“மாமான்னு நான் கூப்பிடும்போது சிலிர்க்கும் உன் கண்களையும் மலரும் உன் முகத்தையும் பார்க்க கோடி கண்கள் வேண்டுமடா.’
“எனது கோபமோ உனது கோபமோ நீர்க்குமிழி மாதிரி சிறிது நேரத்தில் முடிந்துவிடும். அதனால் கோபித்துக் கொண்டு அம்மா வீட்டுக்கு மட்டும் போகக்கூடாது என்று நினைத்துக் கொள்வேன். ஏன்னா நான் இல்லாமல் நீ சிரமப்படக்கூடாது என்றுதான்டா.’
ராமுவுக்கு ரதியின் அன்பு கலந்த வரிகளைப் படித்ததும் சாட்டையால் அடித்தாற்போல உணர்ந்தான். உடனே கிளம்பினான், அலுவலகம் அல்ல அந்த தேவதையின் அம்மா வீட்டுக்கு… தேவதையை அழைத்து வர….
- மே 2011
தொடர்புடைய சிறுகதைகள்
“ஏங்க நம்ம குழந்தைகளைப் பள்ளிக்கூடம் அழைச்சிட்டுப் போய் புத்தகம் வாங்கிக் கொடுத்துவிட்டு. அப்புறம் ஆபீஸ் போங்க” என்று சொன்னாள் நீலா.
“போடி எனக்கு ஆபீஸ்ல அவசரமான வேலை இருக்கு டைம் ஆயிடுச்சி. நீ போய்ட்டு வா’ என்று சொல்லிவிட்டு அலுவலகத்திற்கு கிளம்பினான் ராஜன்.
ஆமாம் ...
மேலும் கதையை படிக்க...
“பளார்” எனக் கன்னத்தில் மேலாளர் சந்தானம் அறைந்ததும், ஒரு நிமிடம் கலங்கிப் போனான் சங்கர். அப்படியே வெளியே வந்து தன் இடத்தில் அமர்ந்தான். சிறிது நேரம் கழித்துச்சுயநினைவுக்கு வந்தான்.
அடுத்த இரண்டு நாட்கள் அலுவலகம் வரவில்லை. மேலிடத்தில் புகார் செய்யலாமா என்று யோசித்தான் ...
மேலும் கதையை படிக்க...
“என்ன சிம்லா, நீ வாங்கனுமுன்னு சொல்லிக்கிட்டு இருந்த, 42 இன்ச் எல்.இ.டி. டிவியை உனக்காக சஸ்பென்சாக வாங்கி வந்து மாட்டினா, சந்தோசத்துல கட்டிபிடிச்சிக்குவேன்னு பார்த்தா, இப்படி கோவப்படுற?” என்று கேட்டான் முத்துச் சோழன்.
“என்னையும் கேட்டிருக்கலாமில்ல. ஏன்டா கேட்காம வாங்கின?” என்றாள் சிம்லா.
“உனக்கு ...
மேலும் கதையை படிக்க...
தஞ்சை தரணியில் காவிரியால் வளமான நகரத்துக்கு அருகாமையில் பச்சை பசேல் என வயல்வெளிக்கு நடுவே அந்த அழகிய கிராமம். காலைக் கதிரவன் மெல்ல எழக், கந்த சஷ்டி கவசம் காதில் தேனாய் விழக், கதிர் இழுத்துப் போர்த்திக் கொண்டு சுகமாய் அரைக் ...
மேலும் கதையை படிக்க...
பிரபு, உங்களுக்குக் கீழே வேலை செய்பவர்களுக்கு, நீங்கள் வேலையைச் சொல்லித்தருவதில்லையாம்!
ரகு மணிக்கணக்கில் பக்கத்துல இருந்து சொல்லித் தருகிறாராம்” என்று கேட்டார் பொதுமேலாளர்.
“மன்னிக்கனும் சார். ஏதாவது ஒரு புதிய வேலையை எங்கள் இருவருக்கும் தாருங்கள். ஒரு வாரம் அவகாசம் கொடுங்கள். எங்கள் ஆட்களுக்கு ...
மேலும் கதையை படிக்க...
அன்பு அதிர்ச்சி! – ஒரு பக்க கதை