எல்லா உறவுகளையும் உதறிவிட்டு வந்து நிற்கும் மனைவியை கண்களில் நீர் மல்க வரவேற்றார் கந்தசுப்பு.
“எந்தப் பிள்ளை வீட்டிலேயும் மரியாதை இல்லாமப் போச்சுங்க. நாலு பேரும் நாலு கூஜாங்கதான்னு உங்களுக்கே தெரியும்? என்னை வேலைக்காரி மாதிரி நாலு மருமகள்களும் நடத்த ஆரம்பிச்சாங்க. எனக்கு பிடிக்கலே!’
“ஹும்… இப்படித்தான் ரிடையரானதுக்கப்புறம் எனக்கும் மரியாதை போச்சு. பந்தமாவது பாசமாவது! நன்றி கெட்ட பசங்க!’
“நமக்குன்னு நாலு காசு சேர்த்து வைக்காம இருந்துட்டோம். அது நம்ம தப்பு’ என்றாள் சரோஜா
“நான் தனியார் கம்பெனில வேலை பார்த்தவன். பென்ஷன் எப்படி வரும் சரோஜா? எதுவுமே சேமிக்கவும் முடியலையே!’ என்றார் கந்தசுப்பு வேதனையோடு. “இப்ப அதைப் பற்றியெல்லாம் பேசி என்னங்க பிரயோஜனம்? எவ்வளவு மனக்கவலை இருந்தாலும் ரயில் வர்றது தெரியாம ஏன் கிராஸ் பண்ணீங்க?’
“பெரியவன் பாஸ்கரோட வீட்டை விட்டு வெளியே வரும்போது நீ மட்டும் பின்னால வந்த தண்ணி லாரியை கவனிச்சியா என்ன?’
- அமானுஷ்யபுத்திரன் (ஆகஸ்ட் 2013)
தொடர்புடைய சிறுகதைகள்
வணக்கம்!
என் பெயர் சங்கர். என்னைப்பற்றி நீங்கள் இன்னும் விவரம் அறிந்துகொள்ள ஆசைப்படலாம், ஆனால் எனக்கு இரயிலுக்கு நேரம் ஆகிறது. இன்னும் அரை மணிநேரத்தில் நான் தாம்பரம் இரயில் நிலையம் அடையவேண்டும். இப்பொழுது துரிதமாக ...
மேலும் கதையை படிக்க...
அப்பா மட்டும் அமைதியின்றி குறுக்கும் நெடுக்குமாக விறாந்தையில் நடந்த படி புறுபுறுத்துக் கொண்டிருந்தார். அவர் புறுபுறுப்பில் நியாயமிருந்தது. எனது எதிர்பர்ர்ப்பு மாமாவின் பிள்ளைகளுடனான சந்திப்பும் அதன் பின் தொடரப் போகும் பம்பலைப் பற்றியுமென்றால், அப்பாவின் கோபமோ தான் சொல்லச் சொல்லக் கேளாமல் ...
மேலும் கதையை படிக்க...
22 ஜன்னல்களும் 15 மர அலமாரிகளும் கொண்ட வீடாய்அது.4பெரிய அறைகளையும்,இரண்டு சிறிய அறைகளையும் கொண்டு நின்ற வீட்டின் அறைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கலராய்.
ஏன் அத்தனை அறைகள்,ஏன் அத்தனை கலர்கள் என்பது இன்று வரை மனம் புடிபடாத புதிராகவே/
கூடவே அந்த ஊரிலேயே பெரியதாக ...
மேலும் கதையை படிக்க...
அந்த தீபாவளி, என் வாழ்க்கையில் மறக்க முடியாதது. அதைப் பற்றி சொல்வதற்குள் தேவைப்பட்ட அளவுக்கு மட்டும் சுயபுராணம். என் பெயர் எதற்கு? நான். அவ்வளவுதான். மற்றவர் பெயர்கள் முக்கியம். அது சந்தானம் ஐயங்கார், பெருந்தேவி, சின்னா இவர்களின் பெயர்கள் இந்த கதைக்கு ...
மேலும் கதையை படிக்க...
கன்னட மூலம்: சுமங்கலா
தமிழில்: நஞ்சுண்டன்
லத்யா மாமு கருப்புக் கண்ணாடிக்கு அப்பால் பார்த்தவாறு மனசை வேறெங்கோ பறிகொடுத்து உட்கார்ந்திருந்தான். அவனது எஸ்டிடி பூத்துக்கு நேர் எதிர்ச் சாலைக்கு அந்தப் பக்கம் காய்கறி மார்க்கெட். அங்கே இரண்டு மூன்று வரிசைகளில் கூடைகளுடன் உட்கார்ந்து காய்கறி ...
மேலும் கதையை படிக்க...