சுலோசனா சின்ன வயசில் அடிக்கடி ஓநாய்கள் அவளைத்துரத்துவதாகக் கனவு கண்டாள். ஒவ்வொரு முறையும் தலை தெறிக்க ஓடுவாள். அவை நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு எச்சில் வழிய துரத்தும். அவை, அவளைப் பிடிப்பதற்குள் கண்விழித்து விடுவாள். வியர்வை வெள்ளத்தில் எழுந்து தண்ணீர் குடிப்பாள். ஆனால், அவள் எந்த இரவும் ஓநாய்களிடம் மாட்டிக் கொண்டதில்லை.
வளர்ந்து பெரியவளாகி அவளுக்கு கல்யாணம் நடந்து முடிந்த பிறகு கனவுகள் நின்றுவிட்டன. ஒருமுறை தன் கணவனுடன் பேசிக்கொண்டிருந்தபோது அவனை உற்றுப்பார்த்தாள்.
“என்ன பார்க்கறே சுலோசனா?”
“உங்களை நான் கல்யாணத்துக்கு முந்தியே எங்கயோ பாத்திருக்கேன்.எங்க பாத்திருக்கேன்?”
“கல்யாணத்துக்கு முன்னாடி நாம சந்திச்சதே இல்லையே”
“எனக்கென்னவோ கனவிலேயோ எங்கயோ உங்களைப் பார்த்தா மாதிரி இருக்கு.”
“என்ன கனா சொல்லு?”
“ஓநாய்களா வந்து துரத்தும். திடீர்னு முழிச்சிண்டுடுவேன்…”
“என்னை அப்டின்னா ஓநாய்ங்கறயா?”
“இல்லை இல்லை நீங்க ஓநாய் கூட்டத்தில் இல்லை. நான் சொல்ல வந்தது என்னன்னா”
“சரித்தான் வந்து படுடி!”
‘இன்னிக்கு வேணாமே…”
“நான் வேணுங்கங்கறப்ப வரணும். அப்பதான் பொண்டாட்டி.”
அன்று அவள் மீண்டும் கனவு காண ஆரம்பித்தாள்.அதே ஓநாய்கள் அதே நாக்கைத் தொங்கப் போட்டு எச்சில் வழிய…ஒரே ஒரு வித்தியாசம்… அவளை ஓநாய்கள் துரத்தவில்லை. அவள் ஓநாய்களுடன் ஓடிக் கொண்டிருந்தாள்
தொடர்புடைய சிறுகதைகள்
சித்ராவின் கல்யாணத்துக்காக மிக உற்சாகமாகத் துவங்கிய பயணம் மெள்ள மெள்ள ஒரு கெட்ட கனவாக மாறியது. பெங்களூரிலிருந்து சென்னைக்கு ஆயிரத்தெட்டு ரயில்களும், பஸ்களும் இருக்க, இவருக்கு, எல்லாருக்குமே பிக்னிக் போல காரில் போகலாம் என்று தோன்றியது விதிதான்.மூர்த்தி வீட்டில் அம்மா ஒரு ...
மேலும் கதையை படிக்க...
சிலருக்கு லாட்டரியில் பரிசு விழுகிறது. சிலரை பிரபல டைரக்டர் பஸ்ஸடாண்டில் பார்த்து “அடுத்த அமாவாசைக்கு ஷ¨ட்டிங்குக்கு வா” என்கிறார்.இப்படித் திடீர் என்று தனிமனிதர்கள் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள்.ஏதோ ஒரு வகையில் பிரசித்தி பெறுகிறார்கள்.அம்மாதிரி நானும் பிரசித்தமானேன். என்னை ஒரு குதிரை கடித்ததால்!
“குதிரையா?” என்று ...
மேலும் கதையை படிக்க...
ஜன்னல் வழியாக ஆதவன் தலையெடுக்கும் முன்னமேயே புல் தரையில் சிறு குழந்தை தவழ்ந்து வருகிறது. களுக்கென்று சிரிக்கிறது. அதனால் நடக்க முடியுமா என்று கவலையாக இருக்கிறது. அதற்குப் பெயர் இருக்கிறது. பறந்து வந்து விளிம்பில் உட்கார்ந்துவிட்டு அறைக்குள் சிற்றடி வைத்து இறங்கி, ...
மேலும் கதையை படிக்க...
ஒன்பதாவது மாடியிலிருந்த தன் அலுவலகத்திலிருந்து மூன்றாம் மாடிக்கு வந்த ஆத்மா, தன் மனைவியைப் பார்த்து வழக்கம் போல் சிரித்துவிட்டு, வழக்கம் போல் தன் அறைக்குச் சென்றான். அங்கிருந்தே ”என்ன எழுதுகிறாய்?” என்றான்.
அங்கிருந்தே சிலேட்டைக் காட்டினாள். நெருக்கமாக அதில் ‘நித்யா நித்யா நித்யா ...
மேலும் கதையை படிக்க...
நான் ராஜாராமன். டில்லிவாசி. நேபாளத்தின் தலைநகர் தெரியாத தாலும், ஆஸ்திரேலியாவின் ஜனத் தொகை தெரியாததாலும் ஐ.ஏ.எஸ் ஸில் தேறாமல், மத்திய சர்க்கார் செக்ரடேரியட்டில் ஒரு சாதாரண அஸிஸ்டென்ட்டாக 210-10-290-15-530 சம்பள ஏணியில் இருப்பவன். சர்க் கார் என்னும் மஹா இயந்திரத்தின் ஆயிரம் ...
மேலும் கதையை படிக்க...