ரயிலின் ஜன்னலோரம் அமர்ந்திருந்தான் சத்யா. கண்கள்மூடி வாக்மேனில் பாடல்கள் கேட்டுக்கொண்டிருந்தான்.
சத்யாவின் மடியில் தலைவைத்து படுத்திருந்தாள் பூங்கோதை. கண்களில் நிற்காமல் கொட்டிக்கொண்டிருந்தது
கண்ணீர் அருவி.
ரயில் மும்பையை நோக்கி விரைந்துகொண்டிருந்தது…
அப்பாவை பிரிந்து வந்ததை நினைத்து நினைத்து அழுதாள் பூங்கோதை. சிறுவயதிலேயே அம்மா இறந்துவிட்டதால் அப்பாதான் எல்லாம். இவளுக்காகவே மறுமணம் செய்யாமல்,தனி ஆளாக இவளை வளர்த்தவர்..
அப்பாவை யார் தரக்குறைவாக பேசினாலும் அவ்வளவுதான், எட்டாம் வகுப்பு படிக்கும்போது ஆசிரியர் ஒருவர் தவறாக அப்பாவை சொன்னதற்கு நெருஞ்சி முள்ளால் அவரது சைக்கிளை பஞ்சர் ஆக்கியவள் பூங்கோதை.
அப்படிப்பட்ட அப்பாவை பிரிந்து……
சத்யாவை கல்லூரியில்தான் சந்தித்தாள்… கல்லூரியில் எந்த பெண்ணைக் கேட்டாலும் தனக்குப் பிடித்தவன்
சத்யா என்றுதான் சொல்வார்கள்.ஆறடி உயரம்…கூடைப்பந்து அணியின் கேப்டன். திறமையான விளையாட்டு வீரன். பூங்கோதை சத்யாவின் தீவிர ரசிகை,பின் காதலி,இப்போது மனைவி. கொடுத்துவைத்தவள் என்று தோழிகளின் வாழ்த்தோடு சத்யாவின் கரம்பிடித்தவள்.
சத்யாவிற்காக இன்று அப்பாவை பிரிந்து பயணிக்கிறாள்…..
சத்யா பிறந்துவளர்ந்தது மும்பையில்தான்,அவனது அப்பா அம்மா இருப்பதும் மும்பைதான். பாட்டிவீட்டிலிருந்து மதுரையில் படித்தவன்.
சத்யாவிற்கு மும்பையில் நல்ல வேலை கிடைத்திருக்கிறது, இனி மதுரை பக்கம் எப்போதும் வர விரும்பமாட்டான் சத்யா.
மதுரைக்கு பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்தில்தான் பூங்கோதையின் அப்பா வசிக்கிறார். வெள்ளந்தி மனிதர்.எப்படித்தான் தனியாக இனி வாழப்போகிறாரோ?
மும்பை வந்து நின்றது ரயில்.
சத்யாவின் வீட்டிற்குள் நுழையும்போதே பயம் கவ்விக்கொள்ள ஆரம்பித்தது…எப்படி சத்யாவின் அப்பா அம்மாவை பார்ப்பது?
படபடப்புடன் காலடி எடுத்துவைத்தாள் பூங்கோதை.
சத்யாவின் அப்பா பூங்கோதையின் அருகில்வந்து பேச ஆரம்பித்தார்.
“அண்ணன் கல்யாணத்துக்கு டூர்ல இருந்து வந்திடுவேன்னு சொல்லிட்டு ,அந்த ஹிந்திக்காரனோட ஓடிப்போயி என் தலையில மண் அள்ளி போட்டுட்டா எம் பொண்ணு, இனிமேல் நீ மட்டும்தாம்மா எம் மக”
மாமனாரின் வயதான கண்களில் தன் அப்பாவை பார்த்து சிலிர்த்தாள் பூங்கோதை.
- Tuesday, December 4, 2007
தொடர்புடைய சிறுகதைகள்
மலை மந்திர் முருகன் கோவில் படிக்கட்டுகளில் இறங்கும்போதுதான் தன்னுடைய காரை லாக் செய்யாமல் வந்துவிட்டதை உணர்ந்தாள் ப்ரியா. விறுவிறுவென்று படிக்கட்டுகளில் இறங்கி செருப்பை அணிந்துகொண்டு ஓட்டமும் நடையுமாக கார் நிறுத்தும் இடம் நோக்கி சென்றாள். மாலை வெயிலில் அழகாய் மின்னியது அந்த ...
மேலும் கதையை படிக்க...
விபத்தில் இறந்து உடல்சிதைந்துபோனதால் உடனே தகனம் பண்ணிவிட்டார்கள் முனியசாமியின் மனைவியை.
இரண்டுமணி நேரமாக எரிகின்ற சிதையை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான் முனியசாமி.
முதலில் அவன் காதுக்கு இந்தச் செய்தியை சொன்னவன் பெட்டிக்கடை வைத்திருக்கும் பால்பாண்டி.
பக்கத்து ஊர் திருவிழாவிற்கு சென்றுவிட்டு இன்றுதான் ஊர் திரும்பினான் முனியசாமி.
முனியசாமி வீட்டிற்கு ...
மேலும் கதையை படிக்க...
இன்னும் சற்று வேகமாக ஓட வேண்டும். அடுத்த தெருவிலிருந்து கேட்கிறது மணிச்சத்தம். கையில் வைத்திருக்கும் பிளாஸ்டிக் செருப்பு வியர்வையில் நனைந்துவிட்டது. கைநழுவி விழுந்துவிட்டால் அவ்வளவுதான் என்கிற எண்ணம் எழுந்தவுடன் இறுக்கமாக பிடித்துக்கொண்டு ஓடினேன்.
வெற்றுக்காலுடன் ஓடியதில் முள்ளொன்று குத்தி வலி உயிர்போனது. ...
மேலும் கதையை படிக்க...
1.
மழை ஓய்ந்த பிற்பகலில் ஏதோவொரு பூவின் வாசம் காற்றில் மிதந்து மிதந்து என்னிடம் வந்துசேர்ந்தபோது அந்த சுகந்தத்தின் முடிவில் தேவதையென என் முன்னால் நீ தோன்றினாய் என்றுதான் எழுத நினைத்தேன். அப்படி எதுவும் நடக்கவில்லையே! முகம் முழுவதும் அப்பிய பாண்ட்ஸ் பவுடரும்,மிதமிஞ்சிய ...
மேலும் கதையை படிக்க...
இருத்தல் தொலைந்த வெம்மையில் தவித்தபோது ஒற்றை மழைத்துளியென என்னில் விழுந்து கடலென விரிந்தவள் நீ. ரயில் நிலையத்தில் பயம் கவ்விய வெட்கத்துடனும் பதபதைப்புடனும் அலைபேசியில் பேசியபடியே என்னை நோக்கி நீ வந்த கணத்தை உறையச்செய்து என் இதயத்தின் நான்கு அறைகளிலும் பத்திரப்படுத்தி ...
மேலும் கதையை படிக்க...
சப்தங்களால் காயப்படாத இரவொன்றில் கடற்கரையில் கடல்பார்த்து அமர்ந்திருந்தபோதுதான் அந்த அலைபேசி அழைப்பு வந்தது. அலையுடன் பேசுவதை நிறுத்திவிட்டு அலைபேசியை எடுத்தேன். அப்போதுதான் காவ்யா நீ என்னிடம்
முதன்முதலாய் பேசினாய். என் கவிதைகள் படித்திருப்பதாக சொன்னாய். கவிதையுலகிற்குள் கைகோர்த்து நடக்க ஆரம்பித்தோம்.
எழுதுகின்ற கவிதைக்கெல்லாம் முதல் ...
மேலும் கதையை படிக்க...
உலகப் புகழ் பெற்ற திருநெல்வேலி ஐ.ஐடியில் படித்த தனக்கு இப்படி ஒரு நிலைமை வந்ததை எண்ணி வருந்தினான் ஜேம்ஸ். உலகின் இளம் விஞ்ஞானி என்கிற பட்டமெல்லாம் தனக்கிருந்து என்ன பயன் என்று நொந்துகொண்டே ஹாலில் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தான்.
ஜெனி மீது ...
மேலும் கதையை படிக்க...
கண்மணிக்கு மழை பிடிக்காது. மழையின் சத்தம் கேட்கும்பொழுதெல்லாம் காதை பொத்திக்கொள்வாள். இந்துமதியை பார்க்க போகிறோம் என்கிற சந்தோஷத்தின் மத்தியிலும் ரயிலுக்கு வெளியே பெய்கின்ற மழை கண்மணியின் மனதை உறுத்தியபடியே இருந்தது. முதல் முறையாக சென்னைக்கு இந்த பத்தாம் வகுப்பு விடுமுறையில்தான் வந்திருக்கிறாள். ...
மேலும் கதையை படிக்க...
ஜன்னல் வழியே நுழைந்த இளவெயில் வசீகரமானதாக தோன்றியது. இளமஞ்சள் நிறத்தில் மேலெழும்பும் சூரியனும் கடந்து செல்லும் மரங்களும் இவளுக்குள் புதுவித உற்சாகத்தை தந்தன.முதல் முறையாக பெருநகரத்திற்குள் நுழைகிறோம் என்கிற சந்தோஷத்துடன் தொலைதூர வானை ரசித்தபடி அமர்ந்திருந்தாள் . இவள் எண்ணம் முழுவதும் ...
மேலும் கதையை படிக்க...
புத்தகம் இல்லாத ரயில் பயணத்தை என்னால் நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை. வேலை விஷயமாக மும்பை கிளம்பவேண்டும் என்பதால் பழைய புத்தகம் ஏதேனும் வாங்கலாமென்று திருவல்லிக்கேணி சென்றேன். அங்கே ஒரு பழைய புத்தக கடையில்தான் அந்த டைரியை முதன்முதலாய் பார்த்தேன். முதல் நான்கைந்து பக்கங்கள் ...
மேலும் கதையை படிக்க...
ஒடோகொயிலியஸ் விர்ஜினியனுஸ் (Odocoileus virginianus)
யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்