இரண்டும் கெட்டான் பதின்ம வயது மைனாவிற்கு. அவளது நைனாவிற்கு அவள் ஒரு அருமை மகள். பல சமயம் அவள் சொல்ல நினைப்பது பலருக்குப் புரியாது. சில சமயம் அவள் என்னதான் நினைக்கிறாள் என்று அவள் நைனாவிற்கே கூடத் தெரியாது. அவளது மூளை அசாதாரணமாகச் சிந்திக்கும். சிறுமி ‘சிந்தனைச் செல்வி’ மைனாவிற்கு தன் தந்தை தன்னைப் பார்த்து பெருமை பட வேண்டும், என் அன்பு மகள் போல உண்டா!!! என ஆனந்தப் பட வைக்க வேண்டும் என்ற தணியாத ஆசை நிறைந்த நல்ல மனம் உண்டு. ஆனால், அதற்காக அவள் எடுக்கும் முயற்சிகள் மட்டும் ஏனோ நேர் எதிர்மறை பலனைக் கொடுத்துவிடும்.
கோடை விடுமுறையின் போது, வருங்காலத்தில் பெப்சி இந்திரா நூயி போல ஒரு பெரிய வணிக நிறுவனத்தின் தலைவியாக மாற என்னென்ன தகுதி தேவையோ அவைகளை கற்று செயல் படுத்த நினைத்தாள். நைனாவிடம் தன் விருப்பத்தை சொல்லவும், நைனாவிற்கு மகிழ்ச்சித் தாங்கவில்லை. உருப்படி இல்லாத தொலைக்காட்சி பார்த்து வீணடிக்கும் தன் சமவயது பெண்கள் போல் இல்லாமல் ஆக்கபூர்வமாக சிந்திக்கிறாளே என் அருமை மைனா என்று நைனா மகிழ்ந்தார். அவளை ஊக்குவிப்பதற்காக தன் பையில் இருந்து ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தை எடுத்து முதலீடாகக் கொடுத்தார். மகளே மைனா எங்கே உன் சமர்த்தைப் பார்க்கலாம், இந்த ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தை பல மடங்காக்கிக் காட்டு பார்ப்போம் என்றார்.
மைனா உடனே செயலில் இறங்கினாள். தன் மிதி வண்டியில் அடுத்த தெருவில் இருக்கும் நீலாவிடம் போனாள். நீலா, இந்தா இந்த ஐந்து ரூபாய்க்கு இரண்டு இரண்டு ரூபாய் நாணயங்கள் கொடு என்று சொன்னாள். மைனாவை நன்கு அறிந்த நீலா மறு பேச்சு பேசாமல் இரு இரண்டு ரூபாய் நாணயங்களைக் கொடுத்துவிட்டு பதிலுக்கு ஐந்து ரூபாய் நாணயத்தை பெற்றுக் கொண்டாள். மைனாவிற்கு தன் திறமையை எண்ணி மகிழ்ச்சி தாளவில்லை. என்ன சுலபமாக ஒரு நாணயத்தை இரண்டு நாணயங்களாக மாற்றிவிட்டாள்.
அடுத்து எதிர் வீட்டு பாட்டியிடம் சென்று, பாட்டி என்னிடம் இருக்கும் இரு இரண்டு ரூபாய்கள் தருகிறேன், நீ எனக்கு மூன்று ஒரு ரூபாய் நாணயங்கள் கொடுக்கிறீர்களா என்று பேரம் பேசினாள். பாட்டியும் அதுக்கென்னடிம்மா கொடுதிட்டாப் போச்சு என்று சொல்லி மூன்று ஒரு ரூபாய் நாணயங்களைக் கொடுத்துவிட்டு இரண்டு இரு ரூபாய் நாணயங்களைப் பெற்றுக் கொண்டாள். மற்றுமொரு வெற்றி மைனாவிற்கு.
அடுத்து தெருவில் பழவண்டி வைத்திருக்கும் வியாபாரியிடம் சென்றாள். அவரிடமும் அவள் பேரம் உடனே படிந்துவிட்டது. மூன்று ஒரு ரூபாய்களைக் கொடுத்து நான்கு ஐம்பது பைசா நாணயங்களைப் பெற்றுக் கொண்டாள். வீட்டிற்கு திரும்பி வரும் வழியில் பக்கத்துக்கு வீட்டு விவேக்கிடம் நான்கு ஐம்பது பைசாகளைத் தள்ளிவிட்டு பதிலுக்கு ஐந்து இருபத்தி ஐந்து பைசா நாணயங்களைப் பெற்றுக் கொண்டாள்.
இப்பொழுது வீட்டில் தன் நைனா வேலை முடிந்து வருவதற்காகக் காத்திருக்கிறாள். நைனா வந்தவுடன் எப்படி ஒரு நாணயத்தை ஐந்து நாணயமாக பெருக்கினாள் என்று தன் வியாபாரத் திறமையை விளக்கக் காத்துக் கொண்டிருக்கிறாள் மைனா.
(இது கவிஞர் “ஷெல் சில்வர்ஸ்டீன்” அவர்களின் “ஸ்மார்ட்” என்ற கவிதையை தழுவி எழுதப் பட்ட கதை)
குறிப்பு:
இக்கதை “வகுப்பறை” தளத்தில் வெளியிடப்பட்டது
தொடர்புடைய சிறுகதைகள்
காரை விட்டிறங்கிய சிவகுமார் மெதுவாக கழுத்து டையை தளர்த்திய வண்ணம் உள்ளே நுழைந்தார். மதிய உணவிற்காகவும், குட்டித் தூக்கத்திற்காகவும் அவர் வீட்டிற்கு வருவது வழக்கம். இந்த ஊருக்கு வந்து பதினைந்து ஆண்டுகளில் மருத்துவமனையும், மருத்துவ தொழிலும் துவங்கி ஊரே அதிசயிக்கும் வண்ணம் ...
மேலும் கதையை படிக்க...
அறிவுரைகள் நன்மை தருபவை. தீய செயலுக்குத் தூண்டும் ஆலோசனைகளுக்கு அறிவுரைகள் என்ற தகுதியை நாம் வழங்குவதில்லை. கூனி, சகுனி ஆகியோர் கூறியவற்றை, அந்த ஆலோசனைகளை, உலக மக்கள் போற்றபடவேண்டிய நல்ல அறிவுரைகள் என நம் முன்னோர்கள் நமக்குப் போதித்ததில்லை. அறிவுரைகளைப் பலரும் ...
மேலும் கதையை படிக்க...
மணி மாலை ஐந்து மணியை நெருங்கியது. நார்மா அன்று வேலை செய்தவரை போதுமென்ற முடிவுடன் அனைத்தையும் ஒழுங்கு செய்துவிட்டு, கணினியை நிறுத்திவிட்டு, கைப்பையை எடுத்துக் கொண்டு அறையை விட்டுக் கிளம்பினாள். "பை, பை, நார்மா, நாளை பார்க்கலாம்," என்று புன்னகைத்தாள் உடன் ...
மேலும் கதையை படிக்க...
காலை நேரத்தில் பள்ளிக்குக் கிளம்ப வேண்டிய பரபரப்பில், அலுவலத்திற்கு செல்ல வேண்டிய அவசரத்தில் வீடு களேபரமாக இருந்தது. மேகலையின் தம்பியும், தம்பி மனைவியும் வீடு முழுவதும் ஓடி ஆடிக் கொண்டிருந்தார்கள். அவர்களது ஐந்து வயது மகள் மஞ்சரி தன் பங்கிற்கு பள்ளி ...
மேலும் கதையை படிக்க...
சாம்பல் வண்ண புத்தம் புது மார்க் டூ அம்பாசடர் கார் கீழப் பாலத்தில் வருவது தெரிந்தது. அதன் மேலே சாமான்கள் வைக்கும் கேரியரில் சில ட்ரங்க் பெட்டிகள் வைத்து விழாமல் நன்கு கட்டப் பட்டிருந்தது. வலதுபக்கம் திரும்பியவுடன் சாலையில் புழுதியைக் கிளப்பிக் ...
மேலும் கதையை படிக்க...
இருக்கையை விட்டு எழுந்த வண்ணம் வாயில் பென்சிலைக் கவ்விக் கொண்டு மேஜையில் கிடந்த தாள்களையும், நோட்டுப் புத்தகங்களையும் பையில் திணித்தேன். அவிழ்ந்திருந்த கூந்தலை வாரிக் கொண்டை போட்டு பென்சிலை அதில் செருகினேன். முதுகில் பையை சுமந்து கொண்டு, கைபேசியை ஜீன்ஸ் பேண்ட்டில் ...
மேலும் கதையை படிக்க...
தேசத்தந்தை காந்தியும் தந்தை பெரியாரும் தீவிரமா விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.
"ஐயா, நீங்க சுதந்திரம் வாங்கினவுடனே காங்கிரஸ கலைக்க சொன்னீங்க. நானும் திராவிட இயக்கம் அரசியலில், தேர்தலில் ஈடுபடாம மக்களுக்கு உழைக்கும் இயக்கமாக மட்டுமே இருக்கணும்னு சொன்னேன். நீங்க சொன்னதையும் யாரும் கேக்கல, நான் ...
மேலும் கதையை படிக்க...
வெளியில் ஆம்புலன்ஸோ, ஃபையர் என்ஜினோ ஏதோ ஒரு அவசர உதவிக்கு வரும் ஊர்தி ஒன்று ஒலி எழுப்பி ஓடி மறைந்த சப்தம் கேட்டு என் தூக்கம் தடைபட்டது. பாவம் யாருக்கு என்ன கஷ்டமோ என்று நினைத்தவாறு மணியைப் பார்த்தேன். மணி இரவு ...
மேலும் கதையை படிக்க...
வழக்கம்போல உணவருந்தும் அறையில் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். பிள்ளைகள் அனைவரும் அப்பாவுடன் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பிப்போம். அம்மா பரிமாறுவார்கள். ஏதாவது கதை பேசியவண்ணம் சாப்பாடு நடக்கும். சிலசமயம் பேச்சு எங்கு அராம்பித்தது எங்கு முடிகிறது ...
மேலும் கதையை படிக்க...
நான் படித்த முதுநிலை நிர்வாகயியல் வகுப்பில் நடந்த நிகழ்ச்சி. ஏற்கனவே பணியில் இருப்பவர்களுக்காக, அதில் நிர்வாகத் திறமையை வளர்த்துக் கொள்ள விரும்புபவர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட வகுப்பு. சேரும் மாணவர்களுக்கோ படித்து தகுதியை வளர்த்துக் கொள்ள ஆசை. ஆனால் அதற்காக வேலையையும் விடமுடியாத சூழ்நிலை. ...
மேலும் கதையை படிக்க...
தீதும் நன்றும் பிறர் தர வாரா!
கொஞ்சமாவது பொறுப்பிருக்கா உனக்கு?
பொங்கல் கொண்டாட வந்திருக்காக!!!
சான்றோனாக்குதல் தந்தையின் கடன்
தெய்வமே கலங்கி நின்ற நேரம்