ஒரு மாலை விருந்தும்… சில மனிதர்களும்…

0
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 19, 2013
பார்வையிட்டோர்: 10,101 
 

வாசலில் குவிந்து கிடந்த செருப்புகளைப் பார்த்தவுடன் “திரும்பி விடலாமா? என்று சமீப காலமாக வரும் எண்ணம் இப்பொழுதும் தவறாமல் வந்து போயிற்று, பலவிதமான ஆண், பெண் செருப்புகளுக்கு நடுவே என்னுடையத் தனியாக அவிழ்த்தேன். மணமான புதிதில் கோயிலுக்கோ அல்லது நண்பர்கள் வீட்டில் விருந்துக்கோ செல்லும் போதெல்லாம் அருணின் செருப்புகளின் பக்கத்தில் என்னுடையதை விடுவதற்குக் கூட மனமில்லாமல் அவற்றின் மேலேயே வழக்கமாக் கொண்டிருந்தன். முதலில் இதைக் கவனித்த அருணுக்கு நாளடைவில் என் பழக்கம் எரிச்சலூட்டுவதாக மாறியது. அது ஒன்று மட்டும்தானா அவனுக்கு எரிச்சலை ஏற்படுத்திய விஷயம்?

மேலும் தொடரவிருந்த நினைவோட்டத்தை நல்லவேளை பின்னால் என்னைப்பார்த்த படி வந்த தோழி சட்டென்று நிறுத்தினாள். முகத்தில் புன்னகையுடன் என்ன, இப்பத்தான் வர்றியா சுபா? எனக்கு நேரமாயிடுத்து என்று கேட்டப்படி அவசர அவசரமாக உள்ளே சென்றவளின் பின்னாலேயே ஒட்டிக் கொண்டு நானும் நுழைந்தேன். வழக்கம்போலவே பெரிய கும்பல்தான். மிர்சந்தானி வீட்டுத் தீபாவளி பரர்ட்டி என்றால் சும்மாவா? கிட்டத் தட்ட சிங்கப்பூரில் உள்ள அனைத்துப் பெரிய மனிதர்களும், குடும்ப நண்பர்களும் குழுமும் இடமாயிற்றே? ஒரு பக்கம் சுடச்சுட ஜ‘லேபி பொரித்துக் கொண்டிருந்தார்கள். இன்னொருபுறம் கடகடவென்று சப்பாத்திகள் தட்டில் பறந்த வண்ணம் இருந்தன.

பெரிய கும்பலில் ஒரு சௌகர்யம். யாருடனும் அதிகம் பேசத் தேவையில்லை. அடுத்தடுத்து ஒவ்வொருவரையும் நெருங்கி, “”நலமா? வேலைப்பளு அதிகமா?” என்று சம்பிரதாயக் கேள்விகள் கேட்டப்படி நகர்ந்தாலே ஒரு மணி நேரம் ஓடிவிடும்.
மதீ நேரமோ சாப்பிடுவதில் சென்று விடும் கடைசிவரை அதிக கவனத்தை ஈர்க்காமலே கூட நழுவிடலாம்.

போன வருட பார்ட்டிக்கும் இந்த வருட பார்ட்டிக்கும் எத்தனை பெரிய வித்தியாசம்? போன வருடம் கூட்டத்தில் என் “ஆண்டிக்’ நகை செட்டை தோழிகள் கவனிக்காமல் போய்விட்டால் என்ன செய்வது என்பதுதான் அக்கணத்தின் மிகப் பெரிய கவலை, ஒரிருவர் அதைப் பற்றிப்பவர்கள் காதில் விழுகிறதா என்ற கொசுறுக் கவலை வேறு! வாழ்க்கைதான் எப்படி மாறிவிட்டது? என்னை வரவேற்க வந்த மிஸஸ் மிர்சந்தானி, “”எல்லாம் நல்லபடியாக முடிஞ்சதா? என்றார்.

கேட்ட பிறகு, நல்ல படியாக என்ற வார்த்தையைத் தவிர்த்திரு“காலமோ என்ற தர்ம சங்கடம் அவர் முகத்தில் படர்வது தெரந்தது. அவரை மேலும் சங்கடப்பட விடாமல். எல்லாம் நல்லபடியாக முடிஞ்சது. இப்போது நான் சுதந்திரப் பறவை!” என்று பேச்சை இலகுவாக்க முயன்றேன். விவாகரத்துதானே ஆயிற்று. நான் என்ன செத்தா போய்விட்டேன்? என்று நினைத்தபடி படி பார்ட்டியை ரசிக்கலாம் என்று முடிவு செய்தேன்!

“எப்படி இருக்கே சுபா?” என்று கனிவாகக் கேட்டப்படி அருகில் வந்தார் டாக்டர் மோட்வானி. இங்குள்ள பல இந்தியர்களின் குடும்ப டாக்டர்; அதனால், குடும்ப விஷயங்களும் தெரிந்தவர்.

“”உன்னை விட்டுட்டுப் போகிறதுக்கு அந்த முட்டாளுக்கு எப்படி மனசு வந்ததோ? நிச்சயமா திரும்பி வருவான் பார்!” என்றார் கேபாமாக. கணவன் எப்ப திரும்ப வந்தாலும் திறந்த கைளோடும். மனத்தோடும் மனைவி காத்துக் கொண்டிருப்பாள் என்று நினைக்கும் தலைமுறையைச் சேர்ந்தவர். நான் நிச்சயமாக அதற்குக் காத்திருக்கவில்லை.
விவாகரத்து அளவுக்கு எப்படிப்போயிற்று என்று பல முறை யோசித்துண்டு. ஒவ்வொரு முறையும் பல்வேறு பதில்கள் வந்தன. “நீ மக்கு’ என்பது முதல் பதில். ஆனால் நான் நானாகத்தான் இருந்தேன். சென்னையில் வளர்ந்து படித்த பெண். நல்ல குடும்ப நிர்வாகி. அனைவரிடமும் அன்போடு பழகும் குணம். ஒன்று தான் கற்கவில்லை. சுய லாபங்களைக் கணக்கில் கொண்டு நட்பு வட்டத்தைப் பெருக்கியபட காய்களை நகர்த்துவதும் அருணுக்குத் தெரிந்த வித்தை! தமக்கு யாரிடமிருந்து என்ன பலன் கிடைக்கும் என்பதுதான் அவனுக்கு முதலில் மனத்தில் படும் விஷயம். அவன் இருந்த மீடியா தொழிலுக்குத் தொடர்புகள் தான் மிக முக்கியம் என்பான். தமக்கு பயன் உண்டு என்று தெரந்தவர்களை மட்டுமே தம் வசீகரமான பேச்சாலும், சிரிப்பாலும் கவர முயல்வான். என்னையும் அவளிடம் போய் பேசு. இவர்களை வீட்டுச் சாப்பிட கூப்பிடு! என்று நச்சரிப்பான். அவனின் இந்த குணம் வேலை விஷயத்தில் அவனுக்குப் பல உயர்வுகளை பெற்றுக் தந்ததென்னவோ உண்மைதான்.

முதலில் ஓரளவு இதற்கெல்லாம் ஒத்துழைக்க நான் முயன்றாலும் தொடர்ந்து என்னால் வேஷம் போட முடியவில்லை. வேறு எந்தவிதத்திலும் என்னை கவராதவர்களிடம் வலுவில் போய் ஒட்டிக்க பிடிக்கவுமில்லை. பொதுவாக அருண் காக்க பிடிக்க நினைப்பவர்கள் நான் என்ன வைரம் அணிந்திருக்கிறேன்? என் வாட்ச் என்ன ப்ராண்ட்’? என்று நோட்டம் விடுபவர்களாகவே இருந்தார்கள். என் பாட்டி வீட்டுக்கு வந்த தட்டானிடம் பேரம் பேசி வாங்கின வைரத்தோடும் என் டைட்டன் வாட்சும் அவர்களைக் கவராதிருத்ததில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லைதான்!

போகுமு“ பார்ட்டிகளுக்கும், டின்னர்களுக்கும் கண்கவரும் முறையில் உடை உடுத்த தெரியாதது இன்னொரு பிரச்னை. ஷ்ரேயாவும் அவினாஷûயும் பிறந்த பிறு ஆரோக்கியமாக இருக்க வேணடும் என்று தான் எனக்கு தோன்றியதே தவிர வயதைக் குறைத்து காட்ட என்னென்ன செய்யணும் என்று தெரியவில்லை. தெரிந்து கொள்ள நான் முனையவில்லை. அருணுடன் வெளியே போகும்போது அங்கு வரும் பெண்களை பார்த்தால், நாளைக்கு நம்ம ஷ்ரேயாவும் இப்படித் தானே வளர்ந்து நிப்பா. இந்த மாதிரியெல்லாம் டிரஸ் பண்ணப்பாளோ இல்லே நம்ல மாதிரி கொஞ்சம் பத்தாம் பசலியா இருப்பபாளே என்று பலவாறாக யோசித்ததுண்டு. அதே நேரம், அருணின் எண்ணங்கள் வேறு மாதிரியானவை என்றே நான் உணர்ந்திருக்கவில்லை.

நான் அதிகம் பழகியிராத ஒரு பெண் மணி அருகே வந்தமர்ந்தாள். பரஸ்பரம் அறிமுகம் முடிந்த பின், “”யார் உன் கணவர்? என்றாள், வரவில்லை என்றவுடன், என்னவர் மாதிரியே ஊரிலே இல்லையா? அப்பா! இந்த சிங்கப்பரிலே இருக்கிற பல கணவர்மார்கள் ஊர் ஊரா சுத்த வேண்டியிருக்கு இல்லை? என்றார். “என் கணவர் என் வாழ்க்கையிலேயே இல்லை, என்று சொல்ல நினைத்த பொழுது எனக்கே சிரிப்பு வந்து விட்டது. இது என்ன சினிமா வசனம் மாதிரி என்று நினைத்தபடி “”ஆமாம்மாம்” என்று பேச்சை முடித்து கொண்டேன். அவள் உடை அலங்காரங்களைப் பார்த்தால் வெளியே கணவர் ஊரிலிரந்தால் நிச்சயம் தம்முடன் வெளியே அழøத்துச் செல்லும்படியாக தான் இருந்தாள்.

ஒரு கட்டத்தில், அருண் என்னை வெளியிடங்களுக்குக் கூட்டிக்கொண்டு போவதை நிறுத்தியபோது கூட நல்ல வேளை, இன்னிக்கு தொல்லை விட்டது என்றுதான் நினைத்து கொண்டேன். ஏய் சுபா! மீனல் நடத்தின பெயிண்டிங் எக்ஸிபிஷனுக்கு அருண் ஒரு சீனப் பெண்ணோட வந்திருந்தானே என்று கேள்விப்பட்டபோது கூட கூட வேலை செய்யறவளா இருக்கும் என்று அலட்சியமாக இருந்த எனக்கு அருணோடு விவகாரதது பேச்சு எழுந்த போது அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

தொழில் வளர்ச்சிக்கு நான் தடையாக இருப்பதாகவும், நான் ஒரு மத்தியவர்க்கப் பிரதிநிதி என்றும் ஏதேதோ காரணங்கள் ஒருவருக்கொருவர் அடிப்படையில் பிடிக்காமல் போயிற்று. காரணங்களைத் துல்லியமாக ஆராய்வதில் என்ன பயன்?’ சரி, எங்கெல்லாம் கையெழுத்துப் போடணும்’ என்றுதான் கேட்டேன் இந்தியா திரும்ப் வந்துடு’ என்று அம்மாவும், அப்பாவும் சொன்னதை உடனே என்னால் ஏற்க முடியவில்லை. இரண்டு குழந்தைகளும் இங்கேயே பிறந்து வளர்ந்தவர்கள், திடீரென்று அப்பாவும் விட்டுட்டுப் போன நிலையில் நாடும் பள்ளிக்கூடமும் மாற வேண்டும் என்றெல்லாம் அடுத்தடுத்து குழந்தைகளிடம் சொல்ல மனம் வரவில்லை.

கொஞ்சம் நாள் பார்ப்பமே என்று நினைத்திருந்தேன்

“”குழந்தைகளைக் கூட்டிக்கிட்டு வரலையா? என்றால் ரேகா, கூட அழைத்துக் கொண்டு வரலாமா என்று ரொம்பவும் யோசித்தேன். சில மாதங்களுக்கு மன் நடந்த ஒரு விஷயம் ஞாபகம் வந்தது.
சுனிதா இரண்டாவது முறையாக மணம் செய்து கொண்டவள், முதல் திருமணத்தில் பிறந்த குழந்தை தாரா ஒரு பார்ட்டியில் மற்ற குழந்தைகள், உனக்கு ரெண்டு அப்பாவாமே! என்று அவளை மிகவும் கேலி செய்து விட்டார்கள் சுனிதாவின் இரண்டாவது கணவர் அமர், பொறுமையாக அந்தக் குழந்தைகளிடம், “”ஆமாம், தாராவோட டாடி நான் நான் பாபா வேறு நாட்டில் இருக்கிறார். என்று அதையே ஒரு விளையாட்டு போல் சமாளித்தான். ஆனால் சுனிதா பல நாட்கள் எண்ணி வருந்தியபடியிருந்தாள். பெரியவர்கள் முதுக்குப் பின்னே காதில் விழாதபடி பேசுவார்கள் குழந்தைகள் முகத்துக்கு முகம் நேராகவே கேட்டு விடுவார்கள். “உன்னோட அப்பா சீன கேர்ள் ஃபிரண்டோட இருக்காரமே? என்று பதிமூன்று வயது ஸ்ரோவிடம் யாராவது கேட்டுவிட்டாள் குழந்தை தாங்க மாட்டாள் “”இருவரையும் கொஞ்ச நாள் கழிச்சு அழைச்சுண்டு வர்றேன்” என்றேன்.

தனியே வளைத்த சீமா, “”சொல்றேனேன்னு தப்பா நினைச்சுக்காதே அருமைக் கைக்குள்ள போட்டுக்கத் தெரியலை உனக்கு . உனக்கென்ன நாற்பது வயசு கூட முடியலை, நான் சொல்றதை எல்லாம் கேட்ட ஈசியா ஒரு சக்ஸெஃபுல் ஆளை இரண்டாவதா கல்யணாம் பண்ணிக்கலாம் என்று சொல்ல ஆரம்பித்த ஆலோசனைகளைக் கேட்டால் ஏதோ உலக அழகிப் போட்டிக்கு தயார் செய்ய வேண்டியது விஷயங்களின் பட்டியல் போல் இருந்தது. “”இதுலெல்லாம் எனக்கு ஆர்வமில்லை சீமா என்று சொன்னபடி விலகினேன்.

கொஞ்ச நேரத்திலேயே, அடுத்த பார்ட்டி எங்கே என்ற பேச்சுக் கிளம்பியது. நண்பர்கள் குழுவில் குணாலுக்கு அடுத்த மாதம் நாற்பது வயதாகப் போவதால் அவன் மனைவி நூபுர் அதைப் பெரிசாக் கொண்டாட திட்டமிட்டிருக்கிறாளம். ஓர் இனிய அதிர்ச்சி கொடுக்கும் விதமாக எல்லோரும் மாறுவேடமிட்டு வரலாம் என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்தார்கள். கைகழுவச் சென்ற நூபுரிடம் “”நூபுர், நான் என்ன வேஷம் போட்டுண்டு வரணும்னு சொல்லவேயில்லையே! என்றேன். உன் இஷ்டம் சுபா” ஆனா ஒரு விஷயம்..” என்று இழுத்தாள்.

பரவாயில்ல சொல்லு…” என்றேன். “”குணால், அருணையும் கூப்பிட்டான், நான் கூட்ச் சொல்லிப் பார்த்தேன். ஆனா குணால் பிஸினஸ்லே அருணை அடிக்கடி சந்திக்க வேண்டியிருக்கு. கூப்பிடாம இருந்தா நல்லா இருக்காதுன்னு சொல்லிட்டான் நீ ஒன்ணும் தப்பா நினைக்கலையே…” என்றாள் சொற்களை மென்றும் விழுங்கியபடியும்.

ம், சோஷியல் நெட்வொர்கிங்! இந்த வித்தைதானே எனக்குத் தெரியாது. மற்றவர்களுக்கு தெரியாமல் இருக்குமா? “”அதனாலென்னா நூபுர்? நாற்பத்திஒண்ணாவது பர்த்தேடக்கு என்னை மட்டும் கூப்பிடு என்ற அசட்டு ஜோக்கை அடித்து விட்டு விலகினேன். வேறு சிலர் இந்த வருட தீபாவளி விருந்துகளுக்கு என்னைக் கூப்பிடாத காரணம் இப்போது சட்டென்று புரிந்தது.
மிஸ்டர் அண்ட் மிஸஸ் மிர்சந்தானியிடமாவது சொல்லிக்கொண்டு கிளம்பலாம் என்று அவர்களைத் தேடினேன் என்ன உதவி வேண்டுமானாலும் தயங்காமல் கேளு சுபா” என்று அன்போடு தயங்காமல் கை வைத்தார். எப்போதும் தொட்டுப் பேசுவர்தான். இந்த முறை ஏனோ ஒரு இனம்புரியாத பயம் ஒட்டிக் கொண்டது அவசரமாக விடை பெற்றுக்கொண்டு வெளியே வந்தேன். தனியாகக் கிடந்த செருப்புகளில் இருந்த சௌகர்யம் புரிந்தது.

டக்கென்று போட்டுக் கொண்டு வெளியேறினேன். கைப்பேசி ஒலித்தது. தீபாவளி வாழ்ததுகள் சொன்ன அம்மா, “”ரெண்டு நாள் முன்னாடி நம்ம சீதாவோட பையன் கல்யாணத்துக்குப் போனேன்டி குழந்தே. எல்லாரும் அரசல் புரசலா உன்னைப் பத்தியே கேட்டுண்டு இருந்தா. எனக்கு ரொம்ப மனசு கஷ்டமா போயிடுத்து. நல்ல வேளை… நீ கொஞ்ச நாளைக்கு அங்கேயே இருக்கலாம்னு முடிவு பண்ணிட்டே. எனக்கும் அப்பாவுக்கும் முதல்ல வருத்தமா இருந்தாலும் இங்கே இருக்கிற மனுஷாலைப் பார்த்த நல்ல முடிவுதான் எடுத்திருக்கேன்னு நினைச்சுண்டேன்” என்றாள்.

“”ம்.. இங்கே இருக்கிறவாளும் மனுஷா தானேம்மா” என்றேன். குரல் கம்மியதால் அம்மாவுக்குச் சரியாகக் கேட்கவில்லை போலும். “” என்னடி கொழந்தே?” என்றாள்!.

– ரம்யா நாகேஸ்வரன் (ஆகஸ்ட் 2011)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *