உன்னைத்தான்.. எம்.எல்.ஏ டிக்கெட் வாங்கிட்டு வந்திருக்கேன்னு சொல்றேன்.. பேசாம இருந்தா எப்படி
ஹும்
அப்படின்னா உனக்கு சந்தோஷம் இல்லையா ?
என்ன பெரிய சந்தோஷம் வேண்டியிருக்கு.. சம்பாதிச்ச காசையெல்லாம் இப்படியே அழிக்கப் போறீங்க..
கவலைப்படாதே.. தனியா இல்லே கூட்டணிதான்.
கூட்டணியா ? யார் யாரோட ?
‘சே.ப.க’ வோட
ரொம்ப அழகுதான், சுத்த தகராறு செய்ற பார்ட்டியோட கூட்டாக்கும் ? உருப்படாப்பலதான்.
பயப்படாதே.. அதனாலதான் இ.தி.க வையும் சேர்த்திருக்கு. சே.ப.க வை சமாளிச்சுடலாம்.
எப்படி பிரிக்கப் போறீங்க ?
செலவை சமமா பிரிச்சுக்கிறதாலே, எதுவானாலும் சமாமாதான் பங்கு.
எனாமோ சோம்பேறிக் கூட்டமெல்லாம் ஒண்ணா சேர்ந்து கூத்தடிக்கறீங்க.
உழைக்காம நாலு காசு பார்க்கலாம்னுதான்
எப்ப ரிசல்ட்’டாம் ?
முன்ன மாதிரி இல்ல, இப்ப எல்லாம் ஒரு நாள்ல தெரிஞ்சுடும். அடுத்தமாசாம் 10ம் தேதி முடிவா தெரிஞ்சுடும்.
இதை ஒரு தொழிலாவே பண்ணறீங்க.. கஷ்டம். பாவம் ஏழை ஜனங்க.
பின்னே லட்சம், கோடின்னு வேற எதிலே சுலபமா சம்பாதிக்க முடியுமாம், சொல்லேன்.
கிழிஞ்சுது முடிவு தெரியற வரைக்கும் எல்லாம் ஒத்துமையா இருப்பீங்க, அப்புறம் எல்லாம் புஸ்ஸூன்னு போயிடும்.
‘நீ வாய வைச்சுத் தொலைக்காதே. ஆயிரம் சாமியை வேண்டிட்டு நான், சேத்துப்பட்டு ப.கணபதி, இந்திராநகர் தி.கருப்புசாமி மூணு பேரும் கூட்டணியா சேர்ந்து மகாநதி லாட்டரி ஏஜென்ஸி டிக்கெட் வாங்கியிருக்கோம். மே எட்டாம் தேதி குலுக்கல். அதிருஷ்டம் அடிச்சா ஒரு கோடியே ஐம்பது லட்சம் குலுக்கல். மூணு பேரும் சமமா பிரிச்சிட்டா கூட லட்சக்கணக்கிலே தேறும். விழுந்தா இதைச் செய்யலாம் இப்பவே ஒரு ஐடியா
பண்ணி பேசிக்கதிலே என்ன தப்பு ? தொடர்ந்து வெறியோட வாங்கிட்டேயிருக்கேன்.. எப்பயாவது ‘லக்’ அடிக்காமலா போயிடும், பார்ப்போம்.
- ஆகஸ்ட் 05, 2004
தொடர்புடைய சிறுகதைகள்
சரவணனுக்கு இருப்பு கொள்ளவில்லை. எப்படியாவது இந்த கோவிலின் அர்ச்சகர் உத்யோகத்தை, இன்றோடு கைகழுவிவிட்டு ஓடிவிட வேண்டுமென்று, அவன் மனம் துடியாய் துடித்துக் கொண்டிருந்தது. அதற்காகத் தான் பிச்சுமணி ஐயருக்காக, சரவணன் காக்க வேண்டியதாகி விட்டது. அந்த கிழவர் இன்று எப்படியும் வந்தே ...
மேலும் கதையை படிக்க...
அன்று உற்சாகத்துடன் தான் எழுந்து கொண்டேன். வளர்மதி பதிப்பகத்தார் இன்று, என்னை வரச் சொல்லி கடிதம் போட்டிருந்தனர். அவர்கள் பதிப்பகத்தில் புத்தகமாக, என் சிறுகதைகள் வெளிவந்தால், அதை விட பெருமையில்லை. இவர்களின் அங்கீகாரம் அபூர்வமென்பதால், எக்காரணத்தைக் கொண்டும் இந்த வாய்ப்பை நழுவ ...
மேலும் கதையை படிக்க...
''வெளியே போகும்போது மறக்காம 'செல்'லை வீட்டிலேயே வெச்சுட்டு போங்க'' என்று சொல்லும் அளவிற்கு நான் தொலைத்த செல்ஃபோன்களின் எண்ணிக்கை அளவுக்கு மிஞ்சி போய்விட்டது.
நோக்கியா, சாம்சங், எல்.ஜி., சோனி எரிக்ஸன், ரிலையன்ஸ் என்று பாரபட்சமில்லாமல் அத்தனை வகையாறா கம்பெனிகளின் செல் கருவியையும் தலா ...
மேலும் கதையை படிக்க...
நுனி விரலைக் கடித்தபடி யோசனை செய்ய ஆரம்பித்தேன். நகச்சுவைதான் தெரிந்ததேயன்றி நகைச்சுவையாக எந்த ஐடியாவும் வரமறுத்தது. கோடை காலப் புழல் ஏரியாய் என் மூளையின் ஹாஸ் 'ஏரியா'வில் அப்படி ஒரு வரட்சி. 'இன்னும் ஒரு வாரத்தில் கொடு' என்று என் நண்பன் ...
மேலும் கதையை படிக்க...
களிதான் நடராஜமூர்த்தியை களிப்படைய செய்யும் படையல் என்பதை யார் சொன்னார்களென்பது சிதம்பர ரகசியம். திருவாதிரை திருநாளன்று இந்த களிக்காக ஆனந்த நடனம் புரியும் நடராஜ மூர்த்தி, என் மனைவி வெந்தும் வேகாததுமான ஒரு வஸ்துவை வெங்கலப்பானை நிறைய பண்ணி வைத்து களி ...
மேலும் கதையை படிக்க...
ஆத்துக்கார் வந்ததுகூட தெரியாமல் சமையலறையில் என் மனைவி அந்த ஆஸ்கர் பாடலை அலறவிட்டுக் கொண்டிருந்தாள். ஒரு பக்கம் குக்கர் 'ஹோ' என்று சப்தம்போட அதற்கு ஒத்த பக்கபலமாக
'ஜெய் ஹோ' அதையும் மீறி கத்திக் கொண்டிருந்தது. சுப்ரபாதம், கந்த சஷ்டி கவசம் இத்யாதிகளை ...
மேலும் கதையை படிக்க...
‘செல்’லுமிடமெல்லாம் தொலைப்பு