எங்கே போனாள் ராதா..! – ஒரு பக்க கதை

0
கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 4,990 
 

அற்பக் காரணத்திற்காக ராதாவுடன் சண்டைபோட்டு விட்டு, டிபன் கூடச் சாப்பிடாமல் அலுவலகம் வந்து விட்டது ஜெகனை உறுத்திற்று.

மணியைப் பார்த்தான். பதினொன்று ஆகி இருந்தது .

வீட்டில் ராதா வேலகைளை முடித்து விட்டு ஓய்வாகத்தான் இருப்பாள். போன் செய்து ‘சாரி டியர்’ என்று சொல்லி விடலாம்

டெலிபோனைத் தன் பக்கமாக இழுத்துக் கொண்டு எண்களைச் சுழற்றினான். எங்கேஜ்ட் சத்தம் கேட்டது

பத்து நிமிடம் கழிந்ததும் மறுபடி முயற்சிதான்.

எங்கேஜ்ட்.

சிறிது நேரம் சென்றதும் மீண்டும் முயற்சிக்க அதே எங்கேஜ்ட் டோன்.

சே! ராதாவுக்கு திமிர் அதிகம்தான்.

மாலை வீடு திரும்பியபோது வீடு பூட்டியிருந்து.

வீட்டைப் பூட்டிவிட்டு எங்கே போனாள் அந்தத் திமிர் பிடித்தவள்?

தன்னிடமிருதந்த சாவியால் பூட்டைத் திறத்து உள்ளே போனான்.

ராதாவின் கடிதம் மேஜை மீது இருந்தது.

‘காலையில் நான் காரணமில்லாமல் போட்ட சண்டைக்கு உங்களிடம் மன்னிப்பு கேட்கலாமென்று பல முறை டெலிபோன் செய்தும் உங்களுடன் பேச முடியவிலைலை..ஆனாலும் உங்களுக்கு அழுத்தம் அதிகம்தான். நான் என் அம்மா வீட்டிற்குப் போகிறேன். உங்கள் கோபம் தீர்ந்ததும் வந்து அழைத்துப் போங்கள்.”

பேட்ரியட் வந்து தலையில் இறங்கியது போலிருந்தது ஜெகனுக்கு. தான் டெலிபோன் செய்த அதே சமயத்தில் அவளும் அவனுடன் பேச முயற்சி செய்திருக்கிறாள்.

அதனால்தான் இரண்டு பக்கமும் எங்கேஜ்டாகே இருந்திருக்கிறது.

சரியான மடையன் நான். தலையில் குட்டிக்கொண்டு ஆட்டோவை அழைத்தான். ராதாவின் அம்மா வீட்டிற்குச் செல்ல!

– இரா.கணேசன் (1991)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *