அன்புள்ள திவ்யா….
என்னுயிரின் ஒவ்வொரு துளியிலும் நிறைந்திருப்பவளே..ஏனடி என்னைப் பிரிந்தாய்?
உனக்கென்று காத்திருக்கும் நிமிடங்களிலெல்லாம் மேகக்கூட்டமெல்லாம்
மல்லிகைபூக்களாக மாறும் அழகினை ரசித்திருக்கிறேன்.
அந்த காத்திருப்பின் ரம்மிய நிமிடங்களை இனி என்று பெறுவேன் கண்ணே!
காதல் மொழியை ஒரே பார்வையில் மொத்தமாய் சத்தமின்றி எனக்கு கற்றுத்தந்ததே உன் கண்கள்…. அந்தக் கண்களை இனி என்று பார்ப்பேன் கண்ணே!
பிள்ளை மனம்கொண்டவள் நீ….என்னை பிரிந்துவிட்டு மெளனமாய் இருக்க உன்னால் எப்படி முடிகிறது திவ்யா?
உன் பிரிவைக்கூட தாங்கி இருப்பேன் கண்ணே….அழாமல் நீ பிரிந்திருந்தால்…
காலத்திற்கு நம் காதல் புரியவில்லை… காதலுக்கும் நம் அருமை தெரியவில்லல. நம்மை பிரித்து வேடிக்கை பார்க்கிறது.
உன்னோடு வாழமுடியாத என்னால் உன் நினைவுகளோடு வாழ முடிகிறேதே….
பிரிந்த நாளில் நீ தந்த வார்த்தைகள் மட்டுமே இன்று என் வாழ்க்கையின் கனத்தை மடிதாங்குகின்றன.
காதலியுடன் வாழாமல் காதலுடன் வாழ்கின்ற உன் ப்ரியமானவன்.
எழுதிய கடிதத்தை மீண்டுமொரு முறை படித்துவிட்டு அதனுடன் ரோஜாப்பூவொன்றை சேர்த்து கீழ்வைத்தேன்
நீர்வழிகின்ற என் கண்களை வியப்புடன் பார்க்கும் என் மகளைக் கூட்டிக்கொண்டு நடக்க ஆரம்பித்தேன் கல்லறைத்தோட்டத்தைவிட்டு.
- Sunday, September 23, 2007
தொடர்புடைய சிறுகதைகள்
அந்தப் பெயரை அப்பா உச்சரிக்கும் போதெல்லாம் இனம் புரியாத சந்தோஷ அலைகள் என்னுள் எழும். வனக் காவலராக பாபநாசத்தில் வேலை செய்கிறார் அப்பா. எங்கள் வீடும் மலையடிவாரத்தில்தான் இருக்கிறது. பானதீர்த்தம் அருவியில் குளிக்க வரும் கூட்டத்தை கட்டுப்படுத்துவதே அவரது வேலை. பலமுறை ...
மேலும் கதையை படிக்க...
உலகப் புகழ் பெற்ற திருநெல்வேலி ஐ.ஐடியில் படித்த தனக்கு இப்படி ஒரு நிலைமை வந்ததை எண்ணி வருந்தினான் ஜேம்ஸ். உலகின் இளம் விஞ்ஞானி என்கிற பட்டமெல்லாம் தனக்கிருந்து என்ன பயன் என்று நொந்துகொண்டே ஹாலில் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தான்.
ஜெனி மீது ...
மேலும் கதையை படிக்க...
1.
அவளது விரல்களின் நீட்சியே மோகமாய் உருப்பெற்று என்னுடலை சில்லிடவைக்கிறது. கற்பனைகளில் வெண்ணிற புரவியேறி கூந்தல் காற்றிலாட அவள் என்னை நோக்கியே எப்போதும் பயணிப்பதாய் எண்ணம் தோன்றுகிறது.அவள் என் வகுப்புத்தோழி நதியா. பத்தாம் வகுப்பில்தான் எங்கள் வகுப்பில் வந்து சேர்ந்தாள். அவளைக் கண்ட ...
மேலும் கதையை படிக்க...
சென்னை வித்தியாசமான ஊரென்பது வந்து இறங்கிய முதல்நாளே புரிந்துவிட்டது. இறக்கையின்றி பறந்துகொண்டிருக்கிறது வாழ்க்கை. நிஜமான புன்னகையை எந்த முகத்திலும் காணமுடியவில்லை. சாப்ட்வேர் கம்பெனி ஒன்றில் வேலை கிடைத்து கிராமத்து நண்பர்களிடம் விடைபெற்று சென்னைக்கு வந்து இறங்கியிருக்கிறேன். அரும்பாக்கத்திலுள்ள நண்பனின் வீட்டை நோக்கி ...
மேலும் கதையை படிக்க...
போட்டி ஆரம்பமானது. வற்றிய குளத்தின் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கம் வரை சென்று மீண்டும் தொடங்கிய இடத்திற்கு வரவேண்டும். செல்வராஜ்தான் ஜெயிக்கபோவதாக எல்லோரும் பேசிக்கொண்டனர். போன வருட கோடைவிடுமுறையில் நடந்த போட்டியில் என்னை ஜெயித்து முதல் பரிசான மூன்று "தேன்மிட்டாய்" பாக்கெட்டுகளை வென்றவன் ...
மேலும் கதையை படிக்க...
கடற்கரை.
கடலைப் பார்த்துக்கொண்டே எவ்வளவு நேரம் இருப்பது?
பேச ஆரம்பித்தான் கார்த்திக்.
"ஏதோ பேசனும்னு சொன்னியே மலர்...."
"என்னை மன்னிச்சுடு,இனிமே உனக்கும் எனக்கும் சம்பந்தமில்லை கார்த்திக்" உடைந்தகுரலில் வந்து விழுந்தது மலரின் வார்த்தைகள்.
அவன் எதிர்பார்த்ததுதான்.
மலருக்கு நிச்சயதார்த்தம் நேற்றுதான்
நடந்தது.
"தெரியும் மலர்"
"உனக்கு கவலையா இல்லையா கார்த்திக்,எனக்கு அழுகையா வருதுடா"
"இதுல அழுறதுக்கு ...
மேலும் கதையை படிக்க...
நீல வானத்தின் அழகையெல்லாம் சிறகடிப்பில் அள்ளிச் செல்லும் பறவைகளை ரசித்து தன்னிலை மறந்து நின்றிருந்தான் சிவா.
மொட்டைமாடியில் கொய்யாமர நிழலில் பறவைகளுக்கு இணையாக பறக்க பட்டம் செய்த நாள் முதல் இன்றுவரை பறவைகளுக்கும் மனதிற்குமிடையேயான
உறவுப்பாலத்தில் பயணித்தன சிவாவின் எண்ண ஊர்திகள்.
சிவாவிற்கு பறவைகள் என்றால் ...
மேலும் கதையை படிக்க...
கடல் தன் அலை இதழ்களால் கரைக்கு முத்தங்களை பரிசளித்துக்கொண்டிருந்தது.
அலையின் முத்தங்களை ரசித்துக்கொண்டிருந்தான் வினோத்.
"என்னடா என்னை வரச்சொல்லிட்டு ஒண்ணுமே பேசாம கடலையே பாக்குற?" பொறுமையிழந்து கேட்டான் சேகர்.
பெருமூச்சு ஒன்றை பலமாய் வெளியிட்டு பேசத்தொடங்கினான் வினோத்.
"சேகர், உனக்கு நல்லாத் தெரியும் எனக்கும் காதலுக்கும் ஒத்தே ...
மேலும் கதையை படிக்க...
குளிச்சு ரெண்டு வாரமாச்சு...பரட்டை முடியுடன் என்னைப் பார்த்தாலே விரட்டி அடிக்கத்தான் எல்லோருக்கும் தோணும்.
அவங்கள சொல்லி தப்பில்லை. என் விதி. பிச்சை சோறு எடுத்து தின்கறதுக்கு சாகலாம்.
போனவாரம்கூட வாழ்க்கையே வெறுத்துபோய் வேகமா வந்த லாரிக்குள்ள பாஞ்சுட்டேன்...
என் நேரம் அப்பவும் சாவு ...
மேலும் கதையை படிக்க...
1.
மழை ஓய்ந்த பிற்பகலில் ஏதோவொரு பூவின் வாசம் காற்றில் மிதந்து மிதந்து என்னிடம் வந்துசேர்ந்தபோது அந்த சுகந்தத்தின் முடிவில் தேவதையென என் முன்னால் நீ தோன்றினாய் என்றுதான் எழுத நினைத்தேன். அப்படி எதுவும் நடக்கவில்லையே! முகம் முழுவதும் அப்பிய பாண்ட்ஸ் பவுடரும்,மிதமிஞ்சிய ...
மேலும் கதையை படிக்க...
ஒடோகொயிலியஸ் விர்ஜினியனுஸ் (Odocoileus virginianus)
ப்ரியாக்குட்டி நான்காம் வகுப்பு ‘ஏ’ பிரிவு