யோசனை! – ஒரு பக்க கதை

1
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: May 31, 2019
பார்வையிட்டோர்: 17,626 
 

அலுவலகத்திற்குச் செல்லும் திவ்யாவைக் கண்ட ஆதவன் முகத்தில் மின்னல் மலர்ச்சி.

அவள் அருகில் வண்டியை நிறுத்தி, ”ஒரு உதவி…? ” என்றான்.

”சொல்லுங்க ? ”

”போற வழியில உள்ள தபால் பெட்டியில இந்த கவரை சேர்க்கனும்.” நீட்டினான்.

”கண்டிப்பா…” கை நீட்டி வாங்கி நடந்தாள்.

நாலடி நடந்தவள் உறையைப் பார்த்து தன் கைபேசியை எடுத்து எண்கள் அழுத்தி காதில் வைத்து…….

”ஹலோ..!” என்றாள்.

”சொல்லுங்க திவ்யா.? ”

”இப்போ பேசுறது என் நம்பர். சேமிச்சு வைச்சுக்கோங்க.” சொன்னாள்.

”முகத்தைப் பார்த்து மனசைப் படிச்ச நமக்கு எப்படி பேசன்னு யோசனை. அதான் என் கைபேசி எண், விலாசத்தைத் தெரிவிக்க இந்த அஞ்சல் உறை யோசனை.” என்றான்.

”நன்றி !” திவ்யா மலர்ந்தாள்.

Print Friendly, PDF & Email

1 thought on “யோசனை! – ஒரு பக்க கதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *