மெரினா கடற்கரை:
“இந்தக் கடல்மேல சத்தியமா சொல்லு நந்தினி நீ என்னை காதலிக்கவே
இல்லையா?” கண்ணில் நீர்துளிக்க கேட்டான் பாலா.
“இல்ல பாலா…உன் புரிதலில்தான் தப்பு இருக்கு. எனக்கு உன்னை பிடிக்கும்,
உன்கூட சினிமா,டிஸ்கோன்னு நான் சுத்தினதும் உண்மை, எனக்கு ஊர்சுத்துறது ரொம்ப பிடிக்கும்,அதுக்கு ஒரு ஆள் தேவைபட்டுச்சு. தேட்ஸ் ஆல்! இதுக்கெல்லாம் பெயர் காதல்,கத்தரிக்காய்ன்னா சுத்த பைத்தியக்காரத்தனம் பாலா” இயல்பாகச் சொன்னாள் நந்தினி.
“எப்படி உன்னால இப்படி பேச முடியுது? உனக்கு மனசே இல்லையா நந்தினி”
“யார் சொன்னா? எனக்கு மனசுமிருக்கு,வாழ்க்கை பத்தின தெளிவும் இருக்கு
அடுத்த வாரம் எனக்கு நிச்சயதார்த்தம் மாப்பிள்ளை அமெரிக்காவுல சாப்ட்வேர் இன்ஞ்சினியர்” நான் வர்றேன் பாலா.
விறுவிறுவென்று நடந்து செல்லும் நந்தினியை தடுக்கமுடியாமல் கடலை
வெறுத்துப்பார்த்துக்கொண்டிருந்தான் பாலா.
மியாமி கடற்கரை:
“நீ ஒரு இந்தியன், நல்ல குடும்பத்து பையன்ங்கறதாலதான் உன்னன உயிருக்கு
உயிரா காதலிச்சேன் அருண். ஆனா இப்போ நாம பிரிஞ்சுடலாம்னு ஈஸியா சொல்றியே
இது உனக்கே நல்லா இருக்கா?” கோபமாகக் கேட்டாள் ஜெனிபர்.
“உண்மைதான் ஜெனிபர், எனக்கும் உன்னை பிடிச்சிருந்தது ஆனா நீ நினைக்கிற மாதிரி
உன்னை என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது. நீயும் ஒரு இந்திய வம்சாவளிப் பெண்தான். ஆனா நீ வளர்ந்த விதம் வேற உன்னால எங்ககுடும்பத்து பெண்ணா இருக்க முடியாது” கவலையின்றி பேசினான் அருண்.
“சே நீ எல்லாம் ஒரு மனுசனா? உன்னை காதலிச்சத நெனச்சா வெட்கமா இருக்கு..கெட் லாஸ்ட் யூ கோவர்ட்” ஆவேசமாக திட்டிவிட்டு எழுந்து சென்றாள் ஜெனிபர்.
“அப்பாடா நிம்மதி இனிமே எனக்கு அப்பா அம்மா பார்த்திருக்கற நந்தினியை கட்டிக்கவேண்டியதுதான் அவ ரொம்பநல்ல குடும்பபெண்ணாம்” அப்பா போன்ல சொன்னதை நினைத்துக்கொண்டே கடலை ரசிக்கத்துவங்கிய அருணைக் கண்டு கைதட்டி சிரித்தது ஒரு மெரினா அலை.
- Sunday, September 16, 2007
தொடர்புடைய சிறுகதைகள்
"எத்தனை நாளுக்குத்தான் இப்படி உனக்குள்ளேயே வச்சுக்கிட்டு கஷ்டபடுவே? பேசாம நேரா போய் சொல்லிடுடா"
அக்கறையுடன் சொன்னான் என் அறைத்தோழன்.
எனக்கு மட்டும் என்ன சொல்லக்கூடாது என்கிற எண்ணமா?
பயம்தான். பயம் மட்டும்தான் காரணம்.
காலேஜே திரும்பி பார்க்குற அழகி அவள். சென்னையில் மிகப்பெரிய
பணக்கார குடும்பத்தில் பிறந்தவள்.
அவளிடம் ...
மேலும் கதையை படிக்க...
பழைய சோற்றை தின்றுகொண்டிருந்த மணி பெரும் சத்தம் கேட்ட திசையை நோக்கி குரைக்க ஆரம்பித்த போது அடுப்பங்கரையில் சமைத்துக்கொண்டிருந்த அம்மாவும், பழைய செய்தித்தாள்களை எடைக்கு போடுவதற்குகட்டிக்கொண்டிருந்த அப்பாவும் வேகமாக பின்வாசலுக்கு ஓடினர். பள்ளிக்கூடத்திற்கு கிளம்பிக்கொண்டிருந்த என் காதுகளை கிழித்துவிடுவதாய் இருந்தது அந்த ...
மேலும் கதையை படிக்க...
கடல் தன் அலை இதழ்களால் கரைக்கு முத்தங்களை பரிசளித்துக்கொண்டிருந்தது.
அலையின் முத்தங்களை ரசித்துக்கொண்டிருந்தான் வினோத்.
"என்னடா என்னை வரச்சொல்லிட்டு ஒண்ணுமே பேசாம கடலையே பாக்குற?" பொறுமையிழந்து கேட்டான் சேகர்.
பெருமூச்சு ஒன்றை பலமாய் வெளியிட்டு பேசத்தொடங்கினான் வினோத்.
"சேகர், உனக்கு நல்லாத் தெரியும் எனக்கும் காதலுக்கும் ஒத்தே ...
மேலும் கதையை படிக்க...
1.
கண்களை திறக்க முடியவில்லை.உடலெங்கும் பரவிய வலி கண்களில் குவிந்திருந்தது. பலமான காற்று வீசுவதும் மரக்கிளைகள் வேகமாய் அசைவதும் உணர முடிந்தது. மிகுந்த வலியுடன் கண்களை திறந்து பார்த்தான் இராவணன். தான் எங்கிருக்கிறோம் என்பது முதலில் புரிபடவில்லை. காய்ந்த புற்களும் இலவம் பஞ்சைப் ...
மேலும் கதையை படிக்க...
இரண்டு நாட்களாக யாரிடமும் பேசவில்லை. எப்படி பேசுவது? பேசுவதற்கு ஆள் வேண்டுமே?
தொடர்ச்சியான மழையில் வெள்ளம் வந்ததில் மொத்த நாடும் அழிந்துபோனது. கடல் கொந்தளிப்பும் சேர்ந்துகொண்டதில் எங்கு பார்த்தாலும் தண்ணீர்.
ஆபத்து காலத்தில் பயன்படுமென்று நான் வாங்கி வைத்திருந்த ரப்பர் படகு ...
மேலும் கதையை படிக்க...
"சொன்னா புரிஞ்சுக்கடா" கவலையுடன் சொன்னான் என் நண்பன் ஜாக்கி.
"முடியாது, அவளுக்கு முத்தம் கொடுக்கத்தான் போறேன்..."
"நீ மட்டும் அவளுக்கு முத்தம் கொடுத்து பாரு அப்புறம் உன்ன பார்க்க வரவே மாட்டா"
"சே சே அவளுக்கு எம்மேல ஆசை அதிகம்...என்னை காதலிக்கிறது அவ கண்ணுலயே தெரியுதுடா"
"ஒரு ...
மேலும் கதையை படிக்க...
இரவு மணி இரண்டு.
வேகமாய் நடந்துகொண்டிருந்த மகேசுக்கு வியர்த்துக்கொட்டியது .. .அந்த தெருவில் அவனைத் தவிர யாரும் இல்லை..
"சே எங்க அப்பனுக்கு அறிவே கிடையாது" மனசுக்குள் தன் தகப்பனை திட்டியவாறே நடையில் வேகம் கூட்டினான்.
அவனுக்கும் அவன் அப்பாவிற்கும் நடந்த உரையாடல் அவன் மனதில்
நிழலாடியது...
"அப்பா ...
மேலும் கதையை படிக்க...
அந்தப் பேனாவின் முனை உடைந்ததை எண்ணி வருந்தியபடியே என் அறைநோக்கி நடந்துகொண்டிருந்தேன். பேனா என்றால் உயிர் எனக்கு. மொத்தமாக நான் சேகரித்த பேனாக்களின் எண்ணிக்கை ஐந்நூறைத் தாண்டும். மை பேனா,பால்பாயிண்ட் பேனா என்று பலவகை பேனாக்கள் என்வசம் இருந்தன.அறைக்கதவை திறந்து உள்சென்று ...
மேலும் கதையை படிக்க...
கடற்கரை.
பிள்ளையார் சிலையை கரைக்க ஒரு கூட்டம்
கடல்நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது.
சடசடவென்று வேகமாக பெய்யத் துவங்கியது மழை.
மழைக்கு ஒதுங்க அருகிலிருக்கும் கோவிலுக்குள் ஓடத்துவங்கினர்
சிறுவர் சிறுமியர்...ஓட்டமும் நடையுமாக கோவிலுக்குள் நுழைந்தனர்
பெரியவர்கள்.
மழையில் நனைந்துகொண்டே மெதுவாய் கோவிலை அடைந்தனர்
காதலர்கள்.
கடல்நீரில் கரையவேண்டிய பிள்ளையார்
மழைநீரில் கரைந்துகொண்டிருந்தார்.
"கொடுத்துவச்ச பிள்ளையாருப்பா உப்புத்தண்ணில
கர்யாம ...
மேலும் கதையை படிக்க...
புழுதிக்காட்டுல பூவு ஒண்ணு பூத்துச்சு.அத்தவயித்துல அழகா பொறந்தா ஆசமக செம்பருத்தி. செவசெவன்னு இருக்கும் அவ பாதம். இலவம் பஞ்சு மாதிரி மெத்து மெத்துன்னு இருக்கும் அந்த பட்டுப்பாதம்.
ரெண்டு தெருவுக்கு பந்தல் போட்டு நாப்பது கெடா வெட்டி எட்டு ஊருக்கு கறிச்சோறு போட்டு ...
மேலும் கதையை படிக்க...
போனோமா வந்தோமான்னு இருக்கணும்