பூங்காவின் ஓரத்தில் தன் மூன்று சக்கர வாகனத்தை விட்டு இறங்காமல் தூரத்தை வெறித்தான் தினகரன்.
அருகில் உள்ள சிமெண்ட் இருக்கையில் மாதவி.
அதிக நேர வெறிப்பிற்குப் பின்…….
”நீ உன் முடிவை மாத்திக்கோ மாதவி..! “மெல்ல சொன்னான்.
“ஏன்…??….”
“சரிப்படாது !”
“அதான் ஏன்னு கேட்கிறேன்..!”
“உன் காதலை என்னால் ஏத்துக்க முடியாது.!”
“காரணம்…?”
“கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவை இல்லே !”
“புரிலை..?!”
“நான் மாற்றுத்திறனாளி !”
“தெரிந்த விசயம்..! நான் குருடி இல்லே !”
“இவ்வளவு அழகானவள்… எதுக்கு இவனைக் கட்டிக்கிட்டாள், வறுமையா..? தாய் மாமன் என்கிற முறையில் தலையில் கட்டலா….? இல்லே… எவனிடமாவது ஏமாந்து வயிற்றில் வாங்கி…இப்படி பலப்படியாய் உன்னைச் சந்தேக கண் கொண்டு எச்ச நினைப்பாய்ப் பார்ப்பாங்க…”
“நான் அதை பத்திக் கவலைப்படலை..”
“நான் கவலைப் படுவேன். !”
“இது உங்களுக்கு அநாவசியக் கவலை. எனக்கு கண் நிறைந்த கணவன் வேணும்ன்னு கடவுளிடம் நான் வேண்டிக்கலை.”
“உன் நினைப்பு அதுவா இருக்கலாம். அதுக்கு நான் பலிக்கடாவாக விரும்பல..”
“அது இல்லை உண்மையான காரணம். உங்களுக்குள் ஒரு தாழ்வு மனப்பான்மை. பெண்ணைத் தாம்பத்தியத்தில் திருப்திப் படுத்த முடியாது என்கிற பயம்..”
“அந்த விசயத்தில் நான் குறை கிடையாது. நான் ஆம்பளை !”
“அப்படி இருக்கும்போது என்ன தயக்கம். என்னைக் கட்டிக்கிட்டு நிருபீங்க.”
“முடியாது ! முடியாது !”
“இப்படி மறுக்கிறதுக்கு அதுதான் சரியான காரணமாய் இருக்க முடியும்..? இல்லே…காதலே தெரியாத, பெண்ணோட மனசு புரியாத ஜடமாய் நீங்க இருக்கனும் !”
தினகரனின் மனதில் ஈட்டி பாய்ந்தது.
“நான் ஜடம் இல்லே மாதவி . காதலிக்காதவனும் இல்லே…!”
மாதவி சடக்கென்று அவனைத் துணுக்குற்றுப் பார்த்தாள்.
“நானும் கல்லூரியில் படிக்கும்போது காதலிச்சேன். ரெண்டு பேரும் உயிருக்குயிராய்ப் பழகினோம். ரெண்டு பக்கமும் சாதி, மதம் எதிர்ப்பு. மனசு வெறுத்து ஒக்கேனக்கல் நீர்வீழ்ச்சியில் போய் குதிச்சோம். எனக்குக் கால் போனது. அவளுக்கு உயிர் போனது. ! “கண்களில் கசிந்த நீரைத் துடைத்தான்.
“நீங்க காதலிச்ச அந்த அமுதாவோட தங்கைதான் நான். உடைந்து போன உங்க மனசுக்கு ஒத்தடம் கொடுக்கனும். உங்களைத் தவிக்க விட்டுவிட்டுப் போன அக்கா ஆசையை நிறைவேத்தி, அவள் ஆத்மா சாந்தி அடைய நான் ஆசைப் படுறேன். !”
‘அவளோட தங்கையா..!! ‘ – அதிர்ந்து பார்த்த தினகரன் மனசுக்குள்….
‘எப்படிப்பட்ட எண்ணம் ! ?? ‘ நினைக்க மலைப்பு வர…. மனசும் மாறியது. முகம் மலர்ந்தது.
தொடர்புடைய சிறுகதைகள்
அம்பிகாவிற்கு அதிர்ச்சியாக இருந்தது. நினைக்க நினைக்க ஆத்திரம் வந்தது.
' அம்மா.....ஆ...! ' வார்த்தையை வெளியில் விடாமல் பல்கலைக் கடித்துக் கொண்டு சுவரை வெறித்தாள்.
அம்மா இருந்தவரைக்கும் இவளுக்கு அல்லலில்லை, அக்குதொக்குகளில்லை. அவள் இறந்து எடுத்த பிறகுதான் பிரச்சனை படலம் ஆரம்பமாயிற்று. பதினாறு படத்திறப்பு ...
மேலும் கதையை படிக்க...
இரவு மணி 11.00.
'ஆம்பளை அஞ்சு மடங்கு வீராப்புன்னா பொம்பளை பத்து மடங்குங்குறதுதான் நடைமுறை வழக்கம், கேள்வி. இவர் மாறாய் இருக்கார். சண்டை.... ரெண்டு நாள்ல சரணாகதி அடைவார்ன்னு நெனைச்சா... ஆள் பத்து நாட்களாகியும் திரும்பாம இருக்கார்.! அஞ்சு நாட்கள்தான் புருசன்கிட்ட முகம் ...
மேலும் கதையை படிக்க...
நாளை காலை திருமணம். மணமகன், மணமகள் , சுற்றம், நட்பு எல்லாமே வந்து மண்டபம் கலகலப்பாய் இருந்த.
எல்லோரும் உண்ட முடித்து உறங்கும் நேரம். சில இளசுகள் சினிமா பார்க்கப் புறப்பட்டுப் போனார்கள். பெண்களில் சிலர் கொட்டாவி விட்டு கும்பலில் படுதாரகள். சிலர் ...
மேலும் கதையை படிக்க...
வெளியே சென்றுவிட்டு வீட்டிற்குள் நுழைந்து அமர்ந்திருந்த கணவனைப் பார்த்த வைதேகிக்கு அதிர்ச்சியாக இருந்தது.
வெளியே சென்றுவிட்டு வந்தால் ஆள் ஒரு நாளும் இப்படி முகம் வாடி அமர்ந்ததே இல்லை. எங்கு சென்று வந்தாலும் முகம் மலர்ச்சியாக இருக்கும். மாலை நேரம் மெடிக்கல் ஷாப்பில் ...
மேலும் கதையை படிக்க...
'அட்டையாய் ஒட்டி படுத்தி எடுக்கிற மனைவி அஞ்சு நிமிசம் பிரிஞ்சாலே அமிர்தம் ! அதுவே அஞ்சு நாள்ன்னா.....?!!' எனக்குத் தலைகால் புரியவில்லை.
மாட்டாதவரை நானும் என் பொஞ்சாதியும்...ரெண்டு புள்ளைங்க பெத்தும் ரொம்ப அன்னியோன்யம். எசகுபிசகாய் ஒருநாள் வீட்ல அடுத்தத் தெரு நிர்மலாவோட இருக்கும்போது ...
மேலும் கதையை படிக்க...
கடலில் தத்தளித்துக்கொண்டிருப்பவன் கையில்.... தொற்றிக்கொள்ள ஒரு கட்டை கிடைத்தது போல.... வறுமையில் கணவனுடன் கவலையில் ஆழ்ந்திருந்த ரம்பாவுக்கு திடீரென்று அந்த எண்ணம் பளிச்சிட்டது.
பற்றிக்கொண்டு நிரம்ப யோசித்தாள். மனதுக்குள் கொஞ்சம் திருப்தி ஏற்பட்டு வழி தென்பட்டது போலிருந்தது.
'' என்னங்க..? '' அருகில் அமர்ந்திருக்கும் ...
மேலும் கதையை படிக்க...
ஆம்பளைங்களா ! வயசாகிப் போனாலும் வாயை வைச்சிக்கிட்டு சும்மா இருங்க. மீறினா அம்பேல், அம்புட்டுதான். என் இடத்துக்கு நீங்க வந்துடுவீங்க.
அனுபவப்பட்டவன் சொல்றேன் கேட்டுக்கோங்க.
நாமதான் எல்லாத்தையும் ஆண்டு அனுபவிச்சி 80 வயசாகி... இன்னையோ நாளையோன்னு பாயும் தலையணையுமாய் படுத்த படுக்கையாய் இருக்கோமே, போற ...
மேலும் கதையை படிக்க...
சேகர் இடிந்து போய் உட்கார்ந்திருந்தான்.
அவனின் முழு ஜாதகமும் தெரிந்த கணேசன் அவனைத் தேற்றிக் கொண்டிருந்தான்.
'இவன் இருக்கும் இடம் எவ்வளவு கலகலப்பாக இருக்கும்..! இப்போது எல்லாம் போய், எது சொல்லியும் கேட்காமல், பயல் மனதைத் தேற்றிக்கொள்ள மாட்டேன் என்கிறானே..! '- நினைக்க நினைக்க ...
மேலும் கதையை படிக்க...
அமாவாசை. மீன் பிடி இல்லை. மணி 7.00. சவகாசமாக எழுந்தான் கண்ணன். வயசு இருபத்தி எட்டு. பொறியியல் படிப்பு. இன்னும் மணமாகாகவில்லை. வேலை கிடைக்காததினாலும் போக விருப்பமில்லாததாலும் அப்பாவுடன் சேர்ந்து சுயதொழில் முயற்சியில் கடல் தொழிலில் இறங்கி விட்டான். தற்போது அப்பாவிற்குச் ...
மேலும் கதையை படிக்க...
தோழி வீட்டிற்கு இரண்டு நாட்கள் விருந்தாளியாகச் சென்று திரும்பிய மகள் தீபிகா வீட்டில் நுழைந்த அடுத்த நொடியே அந்த அதிர்ச்சி செய்தி சொல்லி தலையில் குண்டைத் தூக்கிப் போடுவாள் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை திருவேங்கடம்.
வரன் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். வேண்டாமென்றால் ...
மேலும் கதையை படிக்க...
குண வாழக்கை… பண வாழ்க்கை…!