கொஞ்ச நாட்களாக அவர்கள் இருவரும் நட்புடன் பழகியபோது அவர்களுக்குள் நல்ல புரிந்துணர்வு இருந்தது. அதனாலோ என்னவோ, ஒருவரை ஒருவர் ஈர்க்கப்பட்டார்கள். ஆனால் அதை எப்படிச் சொல்வது என்பதி;ல் இருவருக்கும் தயக்கம் இருந்தது.
ஓவ்வொரு தடவையும் மனம் திறந்து சொல்லிவிடுவோமா என்று நினைக்கும் போதெல்லாம், மற்றவர் தவறாக எடுத்துக் கொள்வாரோ, தூயநட்பு இதனால் உடைந்து விடுமோ என்ற பயத்தில் இருவருமே மௌனம் காத்தனர்.
இனியும் தாங்கமுடியாது என்ற நிலையில், அவள்தான் துணிந்து அவனிடம் கேட்டாள்,
‘பிரதீப், கேட்கிறேனே என்று தப்பாய் எடுத்திடாதே, உனக்கு கேர்ள்பிரண்ட் இருக்கா?’
அவன் புன்சிரிப்பு ஒன்றை உதிர்த்து விட்டு ‘ஆமா’ என்று தலை அசைத்தான்.
அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் மென்று விழுங்கினாள். யார் அந்த அதிர்ஸ்டசாலி என்பதை அறிவதில் ஆர்வம் காட்டினாள்.
‘உன்னோட உள்ளத்தைக் கவர்ந்தவளின் போட்டோ இருந்தால் கொஞ்சம் கொடேன், பார்க்கலாம்!’ என்றாள்.
‘எல்லோரும் தங்க காதலியை நெஞ்சிலே சுமப்பாங்க, நான் மட்டும் வித்தியாசமா கண்ணுக்குள்ளே சுமக்கிறேன்’ என்றான்.
‘போட்டோவைக் கேட்டால் கண்ணுக்குள் சுமக்கிறன் என்கிறாய், விரும்பினால் காட்டு இல்லை என்றால் வேண்டாம்’ என்றாள் பொய்யான கோபத்தோடு.
‘சரி, சரி கோபப்படாதே, இங்கேபார்’ என்று தான் அணிந்திருந்த பாதரசம் பூசப்பட்ட தனது கூலிங்கிளாசைச் சுட்டிக்காட்டினான்.
எதிரே நின்ற அவளது ‘அழகான முகம்’ அதிலே பளீச்சென்று தெரிந்தது.
தொடர்புடைய சிறுகதைகள்
அமீரா தூக்கத்தில் வீரிட்டபடி எழுந்தாள்.
‘என்னம்மா என்னாச்சு கனவு கண்டியா?’ அருகே படுத்திருந்த தாய் அவளை அணைத்து ஆறதல் சொன்னாள்.
‘டாட் சொன்ன சொல்லைக் காப்பாற்ற இல்லையேம்மா’ என்று சொல்லி விம்மி விம்மி அழுதாள். அவளுக்கு ஆறுதல் சொல்லி அவளைத் தூங்க வைத்தாலும் மெலோடியால் ...
மேலும் கதையை படிக்க...
சுபத்ரா காலையில் எழுந்து குளித்து உடைமாற்றித் தலைவாரி சின்னதாகக் கூந்தலைப் பின்னிக் கொண்டாள். கண்ணாடியைப் பார்த்துப் பொட்டு வைத்துக் கொண்டாள். பெட்டியைத் திறந்து ‘சார்டிபிகேட்’ எல்லாவற்றையும் எடுத்து கவரில் வைத்தாள்.
‘நான் போறேன்…!’ என்றாள் மொட்டையாக.
‘எங்கே.. பிறந்த வீட்டிற்கா..?’ என்றான் சுரேஷ் கிண்டலாக.
முறைத்துப் ...
மேலும் கதையை படிக்க...
அம்மா ஸ்டூல் ஒன்றை இழுத்துப் போட்டுக் கொண்டு அதன்மேல் ஏறி நின்று எதையோ பரணில் தேடிக்கொண்டிருந்தாள். நான் இதையெல்லாம் கவனிக்காதது போல பாடத்தில் கவனம்
செலுத்திக் கொண்டிருந்தேன். கடந்த ஒரு வாரமாய் இந்த வீட்டில் இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. அப்பா எழுதிய துண்டுக் ...
மேலும் கதையை படிக்க...
நான் கன்னத்தைத் தடவிப் பார்த்தேன்.
‘ஏன் வலிக்கவில்லை?’
‘என்கிட்ட வேண்டாம்’ என்பது போல் அவள் என்னை முறைத்தபடி நகர்ந்தாள். நல்ல காலம் கன்னத்தில் அறையவில்லை. அவள் என்னைப் பார்த்த பார்வை கன்னத்தில் அறைந்தது போல இருந்தாலும் ஏனோ எனக்கு அது வலிக்காத ஒருவித சுகத்தைத் ...
மேலும் கதையை படிக்க...
(காதலை வெளிப்படுத்த வார்த்தைகள் தேவையில்லைத்தான்,ஆனால் என்னவளுக்கு என் மனதில் உள்ளதை ஏதாவது முறையில் புரிய வைக்க வேண்டுமே! )
ரொரன்ரோ ஈற்ரன் சென்ரரில் ரொம்பவும் பிஸியான அந்தப் புத்தகசாலையில் ''வேலன்டையின்" கார்ட்டுகளை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். விதம் விதமான வர்ணங்களில் அவை, ...
மேலும் கதையை படிக்க...
('பணத்தால் எதையும் வாங்கலாம் என்று ஆணவத்தோடு சொன்னாயே… இப்போ… உன்னால் முடியுமா என்று பார்…!' )
வெற்றிக் களிப்போடு முகத்தைத் துடைத்துக் கொண்டு அந்த டவலை பெண்கள் கூட்டத்தை நோக்கி எறிந்தான் பிரதாப்.. அந்த டவலை எடுப்பதற்கு இளம் ரசிகைகள் போட்டி போட, ...
மேலும் கதையை படிக்க...
கண்களை மெல்லத் திறந்த போது தேவதை போல அவள்தான் எதிரே தரிசனம் தந்தாள். சாட்சாத் அம்மனே கர்ப்பகிரகத்தில் இருந்து இறங்கி முன்னால் உலா வருகிறதோ என்ற நினைப்பில் கூப்பிய கரங்களை ஒரு கணம் எடுக்க மறந்தேன்.
பெண்மையின் இயற்கையான அழகு, நீண்டு விரிந்த ...
மேலும் கதையை படிக்க...
ஒருவருடைய பெயரை வைத்துக் கொண்டு அவருடைய காலத்தைக் கணிக்க முடியுமா என்று சில சமயங்களில் நீங்கள் யோசிக்கலாம். முடியும் என்று நாங்கள் நம்பினோம். ஒரு காலக்கட்டத்தில் யாழ்ப்பாணத்தில் பிறந்த குழந்தைகளுக்கு ஒரேவிதமான முடிவுள்ள பெயர்களைத்தான் பெற்றோர் சூடினார்களோ தெரியவில்லை, அப்படியான தமிழ்ப் ...
மேலும் கதையை படிக்க...
மாலை நேரத்து சப்வேயின் பரபரப்பில் மூழ்கிப் போகாமல் அவன் ஒரு ஓரமாக ஒதுங்கி நின்றான். ஆண்கள் பெண்கள் எல்லோரும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்கள்.
அனேகமானவர்களின் முகங்களில் புன்னகை தவழ்ந்தது. அவர்களின் கைகளில் இன்று வேலன்டைன்ஸ்டே என்பதைச் சொல்லாமல் சொல்லும் வண்ணமலர்கள் சிரித்தன.
குறித்த நேரத்திற்கு ...
மேலும் கதையை படிக்க...
'சூரியா, அந்தப் பெண்ணைப் பார்த்தியா?'
தாய் சாரதா சொன்னதை காதில் வாங்கிக் கொள்ளாமல் அலட்சியமாய் தெருவில் பார்வையைச் செலுத்தினான் சூரியா.
அப்பாவிற்கு கோயில், குளங்களுக்குப் போவதில் கொஞ்சமும் நம்பிக்கையில்லை. அதனாலே என்ன தான் தலை போகிற காரியமாய் இருந்தாலும் வெள்ளிக் கிழமைகளில் தாயைக் கோயிலுக்கு ...
மேலும் கதையை படிக்க...
வார்த்தைதவறிவிட்டாய்ட..டீ..ய்..!
மனம் விரும்பவில்லை சகியே!