மாலை நேரம். இருள் பரவத் தொடங்கியது. அந்த பூங்காவில் ஒரு மூலைப் பெஞ்சில் மோகன் மேல் சாய்ந்து கொண்டு சாருமதி கேட்டாள்.
“ என்னால் இனியும் வீட்டில் சமாளிக்க முடியாதுங்க!….நாம இந்த ஊரை விட்டே எங்காவது போயிடலாமுங்க!….”
“ஏண்டி!…அர்த்தமில்லாம பேசறே?…யாரிடமும் சொல்லாம நாம ஊரை விட்டுப் போனா…ஊர் உலகம் நம்மைப் பற்றி என்ன நினைக்கும்?”
“ உங்களுக்கு என்னைப்பற்றி கொஞ்சம் கூட அக்கறை இல்லே!….நான் அவங்க கிட்டே மாட்டிக்கிட்டா அவங்க என்னை சின்னா பின்னப் படுத்திடுவாங்க!…”
“நான் இல்லேனு சொல்லலே!….நல்லா யோசித்து நாம ஒரு முடிவு எடுக்கலாம்!…”
“ அதற்குள் நேரம் கடந்து விடும்!…” என்றாள் சாருமதி.
சாருமதி சொல்வதிலும் நியாயம் இருந்தது. யோசிப்பதற்குள் காலாண்டு தேர்வு முடிந்து எல்லா ஸ்கூலும் லீவு விட்டு விடுவாங்க..
உள்ளூரிலேயே இருக்கும் மூன்று மகன்களும், மருமகள்களும் வேலைக்குப் போகிறவங்க…தனியாக இருக்கும் தாத்தா, பாட்டி வீட்டில் அவங்க குழந்தைகளை லீவுக்கு கொண்டு வந்து, விட்டு விட்டுப் போயிடுவாங்க…பாவம் வயசான காலத்தில், சாருமதி ஒருத்தியால் எப்படி குறும்பு செய்யும் ஏழு குழந்தைகளையும் ஒரே சமயத்தில் பார்த்துக் கொள்ள முடியும்?
- தி இந்து 25-10-13 இதழ்
தொடர்புடைய சிறுகதைகள்
“என்ன செல்வம்!...பேப்பர் ‘கட்டிங்’குகளை கை நிறைய வைத்துக் கொண்டு ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறே?....”
“ ஆமாண்டா…தமிழ் நாட்டில் சாலை விபத்துக்கள் பெருகி விட்டன…என்று காவல் துறை அடிக்கடி சொல்கிறது!...அது தொடர்பாக ஏன் எப்படி என்று ஒரு சின்ன ஆராய்ச்சி நடத்திப் பார்த்தேன்…ரிசல்ட் ரொம்ப ...
மேலும் கதையை படிக்க...
“ இன்னைக்கு....ஞாயிற்றுக் கிழமை….சரியா ஒன்பது மணிக்கு நீங்களும், உங்க அருமைப் பொண்ணும் டைனிங் டேபிளில் வந்து உட்கார்ந்திடுவீங்க!...நான் அதற்குள் சிக்கன் குழம்பு, வறுவல், இட்லி, தோசை எல்லாம் தயார் செய்ய வேண்டாமா?...சீக்கிரமா போய் ‘லெக் பீஸா’ நீங்களே பார்த்து.... இளங்கறியா வாங்கிட்டு ...
மேலும் கதையை படிக்க...
நேரு மார்க்கெட்டில் வாகன நிறுத்துமிடத்தை பராமரிக்கும் வேலையை ஒரு தனியார் வசம் மாநகராட்சி ஒப்படைந்திருந்தது.
செல்வம் காரை பார்க் செய்தவுடன், ஒரு தடித்த மனிதன் ஒரு துண்டுச் சீட்டை நீட்டி முப்பது ரூபாய் கேட்டான்.
“ என்னப்பா!...அநியாயமா இருக்கு….சைக்கிளுக்கு இரண்டு ரூபாய்…பைக்கிற்கு ஐந்து ரூபாய்…கார்களுக்கு ...
மேலும் கதையை படிக்க...
அந்தப் பிரபல ஜவுளிக் கடை முன் கூட்டத்தைக் கட்டுப் படுத்த முடியாமல் செக்யூரிட்டி தடுமாறிக் கொண்டிருந்தான்.
“ இன்னும் கொஞ்ச நேரம் கழித்து உள்ளே போங்க சார்!....” என்று ஜவுளி எடுக்க குடும்பத்தோடு வந்தவர்களை வாசலிலேயே தடுத்து நிறுத்தினான் செக்யூரிட்டி.
காரணம் உள்ளே கவர்ச்சி ...
மேலும் கதையை படிக்க...
படிக்காதவங்க கூட இப்ப ஏ.டி.எம். மிஷினைப் பயன் படுத்தறாங்க! உள்ளே போன ஆசாமி வெளியே வர ரொம்ப நேரமாச்சு! வெளியே காத்திருந்தேன்.
சிறிது நேரத்தில் அந்த ஆசாமி தேள் கொட்டியது போல் பரபரப்பாக வெளியே வந்தார்.
“என்னாச்சு?...எதற்கு இந்தப் பதட்டம்?” என்று கேட்டேன்.
“சார்!...என் கார்டை ...
மேலும் கதையை படிக்க...
டூவீலரை ஆன் செய்!…..செல்போனை ஆப் செய்!……
சமயம் பார்த்து அடிக்கணும்