தூரத்தில் வரும்போதே தெரிந்து விட்டது ரகுராமனுக்கு.
மீனா..அது மீனாவேதான். எத்தனை காலமாயிற்று பார்த்து. காதல் பரவசத்தில் உருகி உருகி திரிந்தது எல்லாம் மனதில்நினைவு வர, லேசாக வியர்த்தது.
ஏங்காவது மறைந்து கொள்ளலாமா என்று நினைப்பதற்குள் அவளும் கவனித்து விட்டாள்.
மெல்ல அருகில் வந்தவள், ‘எப்படியிருக்கீங்க?’ என்றாள் இயல்பாக.
ம். ஏதோ இருக்கேன். எத்தனை வருஷமாச்சு! நல்லாருக்கியா மீனா’ எனும்போது ஒரு பைக் சர்ரென்று வந்து நின்றது. அதிலிருந்த இளைஞன் ” ஏறுங்க’ என்றான் மீனாவைப் பார்த்து.
யாரது மீனா?
இதுவா! இவன்தான் என் செல்லப்பேரன். கொஞ்ச நேரம்கூட காலாற நடக்க விடமாட்டான். உடனே பைக் எடுத்துகிட்டு வந்திருவான். என் மேல் கொள்ளை பிரியம், வரட்டுமா! என்று வண்டியில் ஏறிக்கொண்டாள்.
மீனாட்சி கொடுத்து வைத்தவள். நம் பேரன் ஒரு முறையாவது இப்படி வண்டியில் கூட்டிப் போயிருப்பானா? என்று மனதில் நினைத்துக்கொண்டு, மெல்ல நடக்க ஆரம்பித்தார் ரகுராமன்.
- ஜி.சசிகுமார் (ஜூலை 2014)
தொடர்புடைய சிறுகதைகள்
தொடர்ந்து மூன்று நாள் மழை !
ஊர் முழுக்க மழைவெள்ளத்தால் மூழ்கின அந்த மாலை வேளையில் மாதவன் தனது ஸ்கூட்டரை மீட்க முயன்று தளர்ந்து போனான். அவனை மழையின் தாக்குதலிருந்து காப்பாற்றினாள் தேவதை போல் அவனருகே வந்த வசந்தா!
அருகிலுள்ள தனது இல்லத்திற்கு மாதவனை ...
மேலும் கதையை படிக்க...
ஆண்கள் மட்டுமே தங்கி இருக்கும் விடுதியின் முதல் மாடியிலிருந்து கீழே சாலையைப் பார்த்த கணபதிக்கு அதிர்ச்சி.
உடன்.... உடல் குப்பென்று வியர்க்க, நடுங்க....அடுத்த வினாடி அறைக்குள் புகுந்து கதவைச் சாத்தித் தாழ்ப்பாள் போட்டுக்கொண்டான்.
மனதில் படபடப்பு அதிகரிக்க கட்டிலில் படுத்து கண்களை மூடினான்.
ஐந்தாவது நிமிடம் ...
மேலும் கதையை படிக்க...
கிருத்திகா! இன்னிக்கி ஊருக்கு புறப்படுறதுக்கு என் உடைகளையெல்லாம் சூட்கேசுல வச்சுக்கிட்டேன், என்று சொன்னாள் மனோகரி. சரியாகவே நீங்க வைக்கல
அண்ணி. நான் வைக்கிறேன் பாருங்க என்றவாறே மனோகரியின் உடைகளை அனைத்தையும் மடிப்பு கலையாமல் வெளியில் எடுத்து, ஒவ்வொன்றாக நீவி,
இரண்டு தட்டு தட்டி, பின்னர் ...
மேலும் கதையை படிக்க...
“வீட்டை நல்ல பூட்டிட்டியான்னு பாரு…’ மனைவி மஞ்சுளாவிடம் சொன்னான் சேகர். சரிபார்த்துவிட்டு சாவியுடன் வந்தாள் மஞ்சுளா.
“சாவியை எதிர்த்த வீட்டு செல்வியிடம் கொடுத்து, பார்த்துங்கங்கன்னு சொல்லிட்டு சீக்கிரம் வா…. பஸ்ஸுக்கு நேரமாச்சு…’
சிறிது தூரம் நடந்திருப்பார்கள். மஞ்சுளா, கணவனின் தோளை தொட்டாள்.
“ஏங்க… நான் கேட்கிறேன்னு ...
மேலும் கதையை படிக்க...
இன்னும்
எத்தனை யுகங்களானாலும்
காத்திருப்பேன் - கனத்த
மௌனத்தைச் சுமந்தபடி...
அதுவொன்றும் வலி தராது...
மௌனத்துக்கு முந்தைய
உன் வார்த்தைகளை விட!
அவனையும் தண்டவாளத்தையும் தவிர யாருமில்லை அந்த ரயில் நிலையத்தில்! ஒரு மூலையில் கிடந்த சிமென்ட் பெஞ்ச்சில் தலைகவிழ்ந்து உட்கார்ந்திருந்தான் காற்றின் கண்களில்கூடப் ...
மேலும் கதையை படிக்க...
‘ஐயோ அப்பா!’ – ஹோம் ஒர்க் முடிக்காததற்காக செளந்தர்யா டீச்சர் பிரம்பால் அடித்தபோது, இப்படித்தான் அலறி விட்டாள எட்டாம் வகுப்பு மாணவி அபிதா.
அந்த தனியார் மெட்ரிக் பள்ளி வளகத்துக்குள் ப்ரீ கே.ஜி.யில் சேர்ந்த நாள் முதலே ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும். யாரும் ...
மேலும் கதையை படிக்க...
“உங்க மகள் லவ் மேரேஜ் செய்துக்கிட்டா” என்று வந்த அலைபேசி தகவலால் ராமசாமி தவிப்போடு உட்கார்ந்திருந்தார். அவரின் மகள் சென்னையில் தங்கி தேசிய வங்கி ஒன்றில் வேலை பார்த்து வந்தாள். அவளின் அலைபேசி அணைத்து வைக்கப்பட்டிருந்ததால் காலையில் தகவல் வந்த அலைபேசிக்கு ...
மேலும் கதையை படிக்க...
அடுத்த சில கணங்களில் என்னை விசாரிப்பார்கள்.
புதிய விசாரணைக் குழுவின் மூத்தவர்கள் என்னையே பார்த்துக் கொண்டிருந்தனர். படிக்கப்படாத அறிக்கை ஒன்று அவர்கள் கையில் படபடத்துக் கொண்டிருந்தது. இந்த முறையாவது அறிக்கை எதிர்பார்த்தபடி அமையுமா? என் பெயரின் களங்கம் நீங்கி என்னைப் பழையபடி பயணங்களுக்கு ...
மேலும் கதையை படிக்க...
"கண்மணிக்கு வலி எடுத்துட்டுப்பா இப்ப தான் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்திருக்கம் சீக்கிரம் வந்துடுப்பா " அம்மா போன் பண்ணி சொன்னப்போ மனேஜருக்கு கூட சொல்லாம ஏதோ ஞாபகத்தல ஆஸ்பத்திரிக்கு ஓடி வந்துட்டன் ,, உன்னை எவளா பிடிக்கும்னு கேப்பியே, இந்த ஒரு ...
மேலும் கதையை படிக்க...
சென்னை ஈ.ஸி.ஆர் சாலையில் பற்பல அடர்த்தியான மரங்களுக்கு அப்பால் ஓசையின்றி இயங்கிக் கொண்டிருந்தது, அந்தப் பிரபலமான ட்ரைவ்-இன் ரெஸ்டாரண்ட்.
ஆங்காங்கு ஒழுங்கற்ற வரிசைகளில் பல்வேறு இரண்டு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் ஓய்வுடன் நின்றிருந்தன. அந்த வெளிர் நீல நிற புத்தம் புதிய ...
மேலும் கதையை படிக்க...
பாதுகாப்பு – ஒரு பக்க கதை
கார்த்திக் கண்மணி காதல் கதை