நந்தகுமார் கல்லூரி மாணவன். பெற்றோருக்குக் கடைசி மகன். செல்லப்பிள்ளை. நல்ல வசதியுள்ள குடும்பம். தாயார் அவனுக்கும் மணமுடிக்க ஆசைப்பட்டாள். உறவுமுறையில் ஒரு செல்வந்தரின் மகள் இருந்தாள். அந்தப் பெண் இந்துமதியை மணம் செய்விக்க முயற்சி செய்தாள். நந்தகுமாரின் அக்கா, தங்கைகள் இந்துமதியின் அழகை வர்ணித்தார்கள். சுருண்ட கூந்தல், சிவந்த உதடு, மைதீட்டிய கண்கள், முத்துப்பற்கள், கோல்ட் ஃப்ரேம் கண்ணாடி என்று சொன்னார்கள்.
உடனே நந்த குமார் ”செயற்கை அழகு செய்துகொள்ளும் பணக்க்காரப் பெண்கள் எனக்கு வேண்டாம், ஏழைப்பெண் என்றாலும் இயற்கை யான அழகுதான் மனதுக்கு இதமானது. சினிமா நடிகைகள் எல்லோருமே செயற்கையான அலங்காரத்தில்தான் ஜொலிக்கிறார்கள் . மேக்-அப் இல்லாவிட்டால் அவர்களை எதிரில் பார்க்கவே முடியாது. ஏழைப்பெண் என்றாலும் அலங்காரமில்லாத இயற்கை அழகிதான் என் மனைவியாகவேண்டும்”, என்று கூறி முடித்தான்.
அவனுடைய அப்பா, ”நந்து, உனக்கு நல்ல பெண் கிடைத்தால் சொல்லு, நானே செய்துவைக்கிறேன்”, என்றார்.
நந்து மனோரமா என்ற பெண்ணை ஒரு திரையரங்கில் சந்தித்து மோகித்தான். அவள் நல்ல அழகி. மனம்விட்டுப் பேசத் தயக்கமா யிருந்தது. நன்றாகவே பழகினாள். முறைப்படி பெண் கேட்க தன் தந்தையை அனுப்பிவைத்தான். மனோவின் தந்தையும் நல்லபடி வரவேற்று உபசரித்தார். கடைசியில், “உங்கள் குடும்பத்தில் சம்பந்தம் செய்ய நான் கொடுத்துவைக்கவில்லை. என் மகளுக்கு மணமுடிக்க எனக்கு பாக்கியமில்லை. என்னை மன்னித்துவிடுங்கள்”, என்று கையெடுத்துக் கும்பிட்டார். நந்துவின் தந்தை செய்வதறியாது திரும்பிவந்தார்.
அதேநேரம் நந்து மனோவை சந்தித்தான். “நான் என் தந்தையை உன் தந்தையிடம் அனுப்பினேன். உன்னைப் பெண் கேட்கத்தான் போயிருக்கிறார். அடுத்த முகூர்த்தத்திலேயே நமக்குத் திருமணம் நடக்கும். உனக்குத் திருப்திதானே?” என்றான் நந்து.
“என்ன, என்னைப் பெண் கேட்கிறாரா? இது என்ன வேடிக்கை? ஒரு வார்த்தை என்னிடம் சொல்லிவிட்டு அனுப்பியிருக்கக்கூடாதா? என் தந்தை என்னவென்று சொல்வார்? மிகவும் வருந்துவாரே”.
“ஏன் மனோ? உனக்குத் திருமணம் நடந்துவிட்டதா? அல்லது, நிச்சயமாகிவிட்டதா? அல்லது நி விதவையா? எதற்கு உன் தந்தை வருந்தவேண்டும்? என்னை அவருக்குப் பிடிக்கவில்லையா? யாராவது மனம் வருந்தும்படி அவரை ஏசிவிட்டார்களா?”
நந்து மளமளவென்று கேள்விகளை அடுக்கினான்.
“இருங்கள் நந்து, நான் உங்களை மிகவும் விரும்புகிறேன். ஆனால், ஒரு நல்ல சினேகிதமாகத்தான். உங்களை மணக்கமுடியாததற்கு வருந்துகிறேன்”.
“அதுதான் ஏன்? ஏன்? என்கிறேன். அதற்கு பதிலே சொல்லமாட்டாயா? உன் தந்தை ஏன் தடுப்பார்? அவருக்குப் பணத்தேவை ஏதாவது உண்டா?
“என் தந்த மிகவும் நல்லவர். என் விருப்பத்தை மிகவும் மதிப்பவர். எனக்கு நல்லதையே செய்பவர்”.
“மனோ, எனக்குப் பொறுமையேயில்லை. என்ன காரணத்தினால் என்னை மணக்க மறுப்பு சொல்கிறாய், சொல். நம், குலம் மதம் என்றுகூட எந்த வேறுபாடுமில்லையே?”
“என்னை நீங்கள் நிர்பந்திப்பதால் உண்மையைச் சொல்லித்தான் ஆகவேண்டும். யாரிடமும் நான் சொன்னதில்லை. நான் பெண் அல்ல என்பதுதான் காரணம். வேறு யாரிடமும் சொல்லவேண்டாம்”, என்றாள் மனோ.
- 1950இல் எழுதப்பட்டது]
தொடர்புடைய சிறுகதைகள்
அப்போது எனக்கு பத்தொன்பது வயது. மாலாவுக்கு ஒன்றரை வயது. அவள் என்
தங்கைகளுடன் என் பிறந்த வீட்டிலேயே தானிருப்பாள். என்னைத் தேடவே மாட்டாள்.
மின்விளக்குவசதிகூட இல்லாத அந்த வீட்டில் நாங்கள் குடியிருந்தோம். பதினெட்டு
ரூபாய் வாடகை; ஒரே மாதம் அட்வான்ஸ். ஒரு பெரிய அறை, ஒரு ...
மேலும் கதையை படிக்க...
கணேசனின் தந்தை இறந்தபின் அவனுக்கு முன்னோர்கள் கடன் செய்வதில் சிரத்தைஅதிகம் ஏற்பட்டது. அம்மாவுக்கும் ரொம்ப திருப்தி. கருப்பு எள்ளு, பலாமூசு, வாழைத்தண்டு, என்று தேடித்தேடி வாங்கிவருவாள். நல்ல வெண்ணெயை வாங்கி காய்ச்சி ஹோமங்களுக்கும் சமையல் சாப்பாட்டுக்கும் பக்ஷணங்களுக்கும் வைப்பான். நுனிவாழைஇலை வாங்கி ...
மேலும் கதையை படிக்க...
நான் வீட்டை விட்டுக் கிளம்பி பத்துநாட்கள் ஆகிவிட்டன. புறப்படும்போது வித்யா திரும்பத்திரும்பச் சொன்னாள். ”இரண்டு தோசை சாப்பிட்டுவிட்டுப் போங்கள்” என்றாள். என் வேலைகளின் நடுவில் நேரமேயில்லை. அதனால் எனக்கு எந்தச் சிற்றுண்டி சாப்பிடும்போதும் என் வித்யாவின் தோசையே மனதில் நின்றது.
கண்ணன் பாட்டில் ...
மேலும் கதையை படிக்க...
பரசுவால் நீலு பேசும் ஒரு வார்த்தைளை பொறுத்துக் கொள்ளவோ மன்னிக்கவோ முடியவே இல்லை. கோபித்து கொள்ளவோ தடுக்கவோ தைரியமுமில்லை. அவளுடைய பேச்சுக்குப் பேச்சு அதை கேட்க நேர்ந்தது. மனம் திடுக்கிட்டு பதறுகிறது. ஆனால் அதற்கு ஒரு காரணமிருந்தது. அவன் சிறுவயதிலேயே யாரோ ...
மேலும் கதையை படிக்க...
பாகீரதியிடம் தெருக்கோடி வீட்டு பையன் ஓடி வந்து, “உங்க வீட்டுக்குபுதுசா ஒருத்தர் வந்திருக்காரில்லயா? அவரை போலீஸ் பிடிச்சுண்டு ஜீப்புலே அழைச்சுண்டு போனா. நான் ஸ்கூலுக்கு போறபோது பார்த்தேன்” என்றபோது பாகி “ஐயையோ, புதுப்பையன் கன்னடமும் தெரியாது. இங்கிலீசும் பேசத்தெரியாது. எங்கே போய் ...
மேலும் கதையை படிக்க...
மாடி வராண்டாவில் பளபளவென்று உடையணிந்தபடி பட்டாம்பூச்சிபோல் நின்றிருந்த ஸஹானாவை கீழே இருந்து அர்ஜுன் கூப்பிட்டான். “ஸஹானா” என்று ராகத்துடன்! உடனே, “ஹாய்!” என்று கையசைத்துச் சிரித்தாள் ஸஹானா.
“ஆச்சு, மணி நாலடிச்சாச்சு. கிளம்பிட்டா ராணி! இனிமே இருட்டினாத்தான் உள்ளே நுழைவாள்”, என்று அம்மா ...
மேலும் கதையை படிக்க...
கௌசல்யாவை திருமணம் செய்துகொண்ட தசரதன் தன் மனதில் தீர்மானித்தான்: ’ஒருத்திக்கு ஒருவன் என்றே வாழுவேன், மற்றொருபெண்ணை மனதில்கூட நினைக்கமாட்டேன்’ என்று உறுதி எடுத்துவிட்டான். ஆனால் ராமனைப் பெற்றவுடன் கௌசல்யா இறந்துவிடவே கௌசல்யாவின் தந்தையே வற்புறுத்தி கேதகியை (இரண்டாம் மகளை) மணமுடித்து வைத்தார். ...
மேலும் கதையை படிக்க...
சைதன்யனும் சைத்ராவும் காதலர்கள். அவன் தன் தங்கையின் திரு மணத்திற்காகவும் அவள் தன்னுடைய அக்காவின் கல்யாணத்திற் காகவும் காத்திருக்க வேண்டிவந்தது. மூன்றுவருடங்களும் ஓடிவிட் டன. இவர்களுடைய திருமணப்பேச்சு வந்தபோது இருகுடும்பங்க ளும் சற்று முறைத்துக்கொண்டன. பிறகு, காலத்திற்குத் தக்கபடி அடுத்ததலைமுறையின் நல்வாழ்வுகருதி ...
மேலும் கதையை படிக்க...
பிருந்தா என்று பெயரிட்டதாலோ என்னவோ அவளுக்கு துளசி என்றால் ரொம்பவும் பிடிக்கும். சிறு வயது முதலே துளசிச் செடி வைத்து நீர் ஊற்றி கோலங்கள் போட்டு விளக்கேற்றி தோத்திரம் படித்து பிரதக்ஷினம் நமஸ்காரம் என்று பெரியவர்கள் போல சிரத்தையுடன் செய்வாள்.
திருமணமாயிற்று. புருஷன் ...
மேலும் கதையை படிக்க...
ஒரு முக்கியமான வைபவத்திற்காக இரண்டு நாட்கள் நாங்கள் சென்னை போய் வந்தவுடன் என் மாமியார் ஒரே புலம்பல். மொலு மொலுவேன்று பொரிந்து தள்ளினார். “இங்கே பாரு சுசீலா, இப்படி முன்னே பின்னே பழக்கமில்லாத புது எடத்துல என்னத் தனியா விட்டுட்டு இனிமே ...
மேலும் கதையை படிக்க...
மஹாளயத்தில் பொன்னம்மா யார்?
நேற்றைய நினைவுகள் கதை தான்