கலைமாமணி விக்கிரமன் (மார்ச் 19, 1928 – டிசம்பர் 1, 2015) நன்கறியப்பட்ட தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர். இவர் அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக உள்ளார். 54 ஆண்டுகள் தொடர்ந்து “அமுதசுரபி” மாத இதழின் ஆசிரியராகப் பணியாற்றியபின் இலக்கியப் பீடம் மாத இதழின் ஆசிரியரானார். இவர் வரலாற்றுப் புதின ஆசிரியருமாவார். முதலில், வேம்பு என்ற புனைப்பெயரில் எழுதத் தொடங்கி, பின்னர், விக்கிரமன் என்று மாற்றிக் கொண்டார்.
ஆக்கங்கள்
- உதயசந்திரன்
- நந்திபுரத்து நாயகி
- பரிவாதினி
- பாண்டியன் மகுடம்
- யாழ் நங்கை
- பராந்தகன் மகள்
- வந்தியத்தேவன் வாள்