மெலட்டூர் இரா.நடராஜன்
பாரம்பரியம் மிக்க இசைக்கும், பரதத்திற்கும் பெயர் போன தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த மெலட்டூர் என்ற அழகிய கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர் இந்த நூலின் ஆசிரியர். இவரது சிறுகதைகள் பெரும்பாலான முன்னணி தமிழ் இதழ்களில் வெளியாகி பேரும் புகழும் ஈட்டியிருக்கின்றன. மனித நேயம், உறவுகளின் மேன்மை, நமது கிராமிய கலாச்சாரம் ஆகியவைகளை நுட்பமான உணர்வுகளோடு, எளிய எழுத்துக்களில் வடித்திருக்கிறார். எனவே இவரது கதைகளை படிக்கும் போது, நம் இயல்பு வாழ்க்கையில் எதிர் படும் மனிதர்களையே அதிகம் காணமுடியும். அந்த அனுபவங்களை மறுபடி உணரமுடியும்.
தேசிய அளவிலான வங்கி ஒன்றில் மேலதிகாரியாக பணியாற்றிக் கொண்டு, இலக்கியப் பணியை தொடர்ந்து செய்து வரும் இவர், வளர்ந்து வரும் முன்னணி சிறுகதை எழுத்தாளர்களில் ஒருவர். 2007 விகடன் தீபாவளி மலரில் இவர் எழுதிய 12 ஒரு பக்க கதைகள் ‘நட்சத்திர கதைகளாக’ வெளியானதும், 2008ல் திலமலர்-வாரமலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் இவரது சிறுகதை பரிசு பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
**********************************************************************
மெலட்டூர் இரா நடராஜன்,
இந்தியா
mrn62@rediffmail.com
**********************************************************************