செய்யாறு தி.தா.நாராயணன்
செய்யாறு தி.தா.நாராயணன்
நான் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு என்ற ஊரைச் சேர்ந்தவன்…ஓய்வு பெற்ற அரசு ஊழியர். .எழுபத்தைந்துக்கு மேற்பட்ட சிறுகதைகளையும், இரண்டு அறிவியல் நாவல்களையும் செய்யாறு தி.தா நாராயணன் என்ற பெயரில் எழுதியுள்ளேன்,எழுதிகொண்டுமிருக்கிறேன்.
சிறுகதைகள்:—
என் கதைகள் குமுதம், தினமணி கதிர், தினமலர், இலக்கியப்பீடம், கலைமகள்,கணையாழி, செம்மலர் ,தாமரை, கிழக்கு வாசல் உதயம், தாராமதி, போன்ற இதழ்களிலும், அவைகள் நடத்திய சிறுகதைப் போட்டிகளிலும், திண்ணை டாட்காம் போன்ற இணையதள இதழ்களிலும், இலக்கிய சங்கங்கள் நடத்திய போட்டிகளிலும், வெளியாகி, பல பரிசுகளை வென்றிருக்கின்றன.
`பகடை’, `தோற்றப்பிழை’—ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன.
`உயிர்களைத் தேடித் தெடி….’, `அணுவைத் துளைத்து….” ஆகிய இரண்டு அறிவியல் நாவல்கள் எழுதியுள்ளேன்.